வரும் தண்ணீரிலே; எரி முளைத்தென்ன - நெருப்புத் தோன்றியது போல; சீற்றம் மீக் கொண்டு- சினம் மேலோங்க; தாமரைச் செங்கண் சிவந்தன- இராமபிரானுடைய தாமரை மலர் போன்ற செம்மையான கண்கள் கோபத்தால் சிவந்தன. |
வேலையான் - கடல் வேந்தன். கருணைக் கடலான இராமபிரானுக்குக் கோபம் இயற்கையல்ல என்பதால் பொங்கி எழும் புனலிடையே நெருப்பு முளைத்தது போல், கருணை நிறைந்த உள்ளத்திலே சினம் கொண்டான் என்றார். நீரிலே நெருப்பு முளைக்காது எனவே இது இல்பொருளுவமையாம். |
(7) |
6596. | 'மாண்ட இல் இழந்து அயரும் நான், வழி, தனை |
| வணங்கி, |
| வேண்ட, "இல்லை" என்று ஒளித்ததாம்' என, மனம் |
| வெதும்பி, |
| நீண்ட வில்லுடை நெடுங் கனல் உயிர்ப்பொடும் |
| நெடு நாண் |
| பூண்ட வில் எனக் குனிந்தன, கொழுங் கடைப் |
| புருவம். |
|
மாண்ட இல் இழந்து அயரும் நான்- மாண்புமிக்க இல்லாளாகிய சீதாபிராட்டியை இழந்து வருந்தும் நான்; வழிதனை வணங்கி வேண்ட- அந்த பிராட்டியை மீட்டு வரச் செல்லவழியை வணங்கி வருணனை வேண்டவும்; இல்லை என்று ஒளித்ததாம் என- வழிவிடுதற்கில்லை என்பதால் வருணன் வராது ஒளிந்தனனோ என்று; மனம் வெதும்பி - இராமபிரான் மனம் வெதும்பினானாக; நீண்ட வில்லுடை நெடுங்கனல் உயிர்ப்பொடும்- நீண்ட ஒளியை உடைய நெருப்பைப் போன்ற பெருமூச்சுடனும்; நெடு நாண் பூண்டவில் என- நீண்ட நாண் பூட்டிய வில்லைப் போலவும்; கொழுங்கடைப் புருவம் குனிந்தன - செழுமையான புருவங்கள் வளைந்தன. |
சினத்தாலும் புருவங்கள் வளைதலுண்டு என்பதால் 'புருவம் குனிந்தன' என்றார். 'மாண்டஇல்' என்பதற்கு மாண்புடைய மனைவி என்பது பொருள் 'மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்' என்ற புறப்பாடலில் (புறம் - 191) இப்பொருளில் வந்தது நினைதற்குரியதாம். இல்லை என்று சொல்லும் குறிப்புத் தோன்ற ஒளிந்து கொண்டான் என்னும் பொருள்பட 'இல்லை என்று ஒளித்ததாம்' |