என்றார். புருவம் வளைந்தது வில் வளைவதை நினைவு படுத்தும். நீண்டவில்-நெடிய ஒளி. நாண் பூண்ட வில் - நாண் பூட்டியவில். |
(8) |
6597. | 'ஒன்றும் வேண்டலர்ஆயினும், ஒருவர்பால் ஒருவர் |
| சென்று வேண்டுவரேல், அவர் சிறுமையின் தீரார்; |
| இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான்; |
| நன்று, நன்று !' என, நகையொடும் புகை உக, |
| நக்கான். |
|
ஒன்றும் வேண்டலர் ஆயினும்- ஒருவர், எவரிடமும் எதையும் வேண்டாதவர் என்றாலும்; ஒருவர் பால் ஒருவர் சென்று வேண்டுவரேல் - ஒருவரிடம் ஒருவர்சென்று ஒரு பொருளை வேண்டுவாராயின்; அவர் சிறுமையின் தீரார்- அவ்வாறு வேண்டியவர் சிறுமையிலிருந்து நீங்க மாட்டார்; இன்று வேண்டியது- இன்று நான் வருணனை வேண்டியதாகிய; நெறிதனை எறிகடல் மறுத்தான்- இலங்கைக்குச் செல்லும் வழியைத் தர அலைபொங்கும் கடல் வேந்தன் மறுத்துவிட்டான்; நன்று நன்று என- நல்லது நல்லது என்று; நகையொடு புகை உக- சிரிப்போடு, கோபத்தால் புகையும் தோன்ற; நக்கான்- இராமபிரான் கோபச்சிரிப்புச் சிரித்தான். |
பொதுப் பொருளைக் கூறிச் சிறப்புப் பொருளை விளக்குவதால் இது வேற்றுப் பொருள் வைப்பணியாகும். |
(9) |
6598. | ' "பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத் |
| தாரம் நீங்கிய தன்மையன், ஆதலின், தகைசால் |
| வீரம் நீங்கிய மனிதன்" என்று இகழ்ச்சி மேல் |
| விளைய, |
| ஈரம் நீங்கியது, எறி கடல் ஆம்' என இசைத்தான். |
|
பாரம் நீங்கிய சிலையினன்- பெருமையில்லாத வில்லையுடையவன்; இராவணன் பறிப்பத்தாரம் நீங்கிய தன்மையன்- இராவணன் கவர்ந்து கொண்டமையால் மனைவியை நீங்கிய தன்மையினன்; ஆதலின், தகை சால் வீரம் நீங்கியமனிதன் - ஆதலால், தகுதி நிறைந்ததான வீரம் நீங்கிய மானிடன்; என்று இகழ்ச்சி மேல் விளைய - எனக்கருதி, மேலும் இகழ்ச்சி தோன்ற; எறிகடல்- அலையெறியும் கடலுக்கு அரசனான வருணன்; ஈரம் |