பக்கம் எண் :

386யுத்த காண்டம் 

கொண்டிருந்த   அரக்கர்கள்   இராமனது   அம்பால்  அழிவர்
என்பதால் "உலகத்து நலிவு தீர" என்றான்.
 

(77)
 

6666.

'மன்னவ! மருகாந்தாரம் என்பது ஓர் தீவின்

வாழ்வார்,

அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார், அவுணர்

ஆயோர்,

தின்னவே உலகம் எல்லாம் தீந்தன; எனக்கும் தீயார்;

மின் உமிழ் கணையை வெய்யோர்மேல் செல விடுதி'

என்றான்.

 

மன்னவ-  உலகனைத்துக்கும்  மன்னனாக விளங்குபவனே;
மருகாந்தாரம்  என்பதோர் தீவில் வாழ்வார்- மருகாந்தாரம்
என்ற பெயர் கொண்ட கடல் நடுவே உள்ள தீவில் வாழ்பவர்கள்;
அன்னவர் சத கோடிக்கு மேல் உளர்- அத்தகையோர் நூறு
கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையினராக உள்ளனர்;  அவுணர்
ஆயோர் தின்னவே உலகமெல்லாம் தீந்தன
- அரக்கர்களான
அவர்கள்   தின்பதால்  உலகமெல்லாம்   அழிந்து   போயிற்று;
எனக்கும் தீயார் - அவ்வரக்கர்கள்  எனக்கும் தீங்கு செய்யும்
தீயவர்கள்; மீன் உமிழ் கணையை- மின்னலைப் போல ஒளியை
உமிழும்  இந்த  அம்பை;  வெய்யோர்   மேற்செல   விடுதி
என்றான்
- அந்தக் கொடியவர்கள் மேல் செல்லுமாறு விடுவாயாக
என்றான்.
 

'உலகம்' இடவாகு  பெயராக உலக  மக்களை  உணர்த்தியது.
அரக்கர்  தின்பதற்கு  உரியது  அவ்வுயிர்களின்  உடல்களேயாம்.
தீயும் என்பது  உறுதியாதலால் 'தீந்தது'  என்று கூறினான்  என்க;
(கால, வழுவமைதி)  தன்னை  அடைக்கலமடைந்த வருணனுக்குத்
தீயோர்தனக்கும்  தீயோர்  என்பது இராமனது கொள்கையாதலின்
'எனக்கும் தீயோர்' என்றான். அவுணர் - அசுரர். சதம் - நூறு.
 

(78)
 

6667.

நேடி, நூல் தெரிந்துளோர்தம் உணர்விற்கும், நிமிர

நின்றான்,

'கோடி நூறு ஆய தீய அவுணரைக் குலங்களோடும்

ஓடி நூறு' என்று விட்டான்; ஓர் இமை ஒடுங்கா

முன்னம்,

பாடி நூறாக நூறி மீண்டது, அப் பகழித் தெய்வம்.