அடைவதுண்டோ? (இல்லை); மாய் வினை இயற்றி- அழியும்படியான செயலைச் செய்து; வருணன் மேல் வந்த சீற்றம் - வருணன் மீது வந்த இராமபிரானது வெகுளி (வருணனை எதுவும் செய்யாது); தீவினை உடையார் மாட்டே- தீய செயல்களைப் புரிந்துவந்த மருகாந்தாரத்து அரக்கர் பக்கம் சென்று; தீங்கினைச் செய்ததன்றே- அவர்களுக்குத் தீங்கை விளைவித்ததல்லவா? |
அற நெறியில் நின்று ஒழுகும் நல்லோர்களுக்கு எவ்விதத்திலும் நன்மையே நடக்கும் என்ற பொதுப் பொருளைக் கூறி வருணன் உய்ந்தான் மருகாந்தாரத்து அரக்கர் அழிந்தனர் என்ற சிறப்புப் பொருளை விளக்குவதால் இது வேற்றுப் பொருள் வைப்பணியாகும். ஆய் வினை - ஆராய்ந்து செய்யும் நல்ல செயல்கள். மாய் வினை - மாய்ப்பதற்குரிய வினை. |
(80) |
6669. | பாபமே இயற்றினாரை, பல் நெடுங் காதம் ஓடி, |
| தூபமே பெருகும் வண்ணம், எரி எழச் சுட்டது |
| அன்றே, |
| தீபமே அனைய ஞானத் திரு மறை முனிவர் செப்பும் |
| சாபமே ஒத்தது அம்பு;-தருமமே வலியது அம்மா! |
|
பாபமே இயற்றினாரை- பாவம் மிக்க செயல்களையே புரிந்து வந்த அரக்கர்களை; பல நெடும்காதம் ஓடி- பலகாதங்களாகிய நெடும் தூரம் விரைந்து சென்று; தூபமே பெருகும் வண்ணம்- மருகாந்தாரத் தீவு முழுதும் புகை சூழும்படி; எரி எழச் சுட்டது- நெருப்பு எழும்படி சுட்டு அழித்தது; தீபமே அனைய ஞான- புற இருளை மாற்றும் விளக்குப் போன்று, அக இருளை மாற்றவல்ல தீபமாகிய ஞானம் மிக்க; திருமுறை முனிவர் செப்பும்- தெய்வத்தன்மை வாய்ந்த வேதங்களை அறிந்த முனிவர்கள் கூறுகின்ற; சாபமே ஒத்தது அம்பு- சாப மொழியை ஒத்தது இராமபாணம்; தருமமே வலியது அம்மா- தருமம் எத்தனை வலிவுடையது. |
"நிறை மொழிமாந்தர் பெருமை நிலத்து மறை மொழிகாட்டி விடும்' என்பது குறள் கூறும் உண்மை. அன்றே என்பது அசை. அம்மா - வியப்பிடைச் சொல். அதர்மத்தை விரைந்தழிக்கவல்ல தர்மமே வலிமை மிக்கது என்பார் 'தருமமே வலியது' என்றார். |
(81) |