இராமன் வழி வேண்ட வருணன் சேதுகட்டச் சொல்லுதல் |
6670. | 'மொழி உனக்கு அபயம் என்றாய்; ஆதலான், முனிவு |
| தீர்ந்தேன்; |
| பழி எனக்கு ஆகும் என்று, பாதகர் பரவை என்னும் |
| குழியினைக் கருதிச் செய்த குமண்டையைக் குறித்து |
| நீங்க, |
| வழியினைத் தருதி' என்றான், வருணனை நோக்கி, |
| வள்ளல். |
|
வள்ளல் வருணனை நோக்கி - வேண்டுவார் வேண்டியதருளும் வள்ளலாகிய இராமபிரான் வருணனைப் பார்த்து; மொழி உனக்கு அபயம் என்றாய்- 'உனக்கு அடைக்கலம்' என்று ஒரு சொல் நீ சொன்னாய்; ஆதலால் முனிவு தீர்ந்தேன்- அதனாலே உன் மீது கொண்டிருந்த சினம் தீர்ந்தேன்; பழி எனக்கு ஆகும் என்று- இராமன் தனது மனைவியைக் கூடக் காப்பாற்றும் வலிமை இல்லாதவன் என்று உலக மக்கள் கூறும் பழிக்கு நான் ஆளாகட்டும் என்று; பாதகர் பரவை என்னும் குழியினைக் கருதி - பாதகர்களாகிய அரக்கர்கள் இலங்கைக்கு அரணாகக் கடல் என்ற குழி இருப்பதைக் கருதி; செய்த குமண்டையைக் குறித்து- செய்த கூத்தினைக் குறித்து; நீங்க வழியினைத் தருதி என்றான்- அது நீங்க, இலங்கை செல்லுதற்குரிய வழியைத் தருவாயாக என்றான். |
பாதகர் - இராவணன் முதலானோர் பாதகர் 'பரவை (கடல்) நமக்குப் பாதுகாப்பான 'நீரரண்' என்று நினைக்கலாம்; அது நமக்குத் தாண்ட முடிந்த ஒரு சிறிய 'குழி'தான் என்பது இராமபிரான் கருத்து. குமண்டை - மகிழ்ச்சிச் செருக்கால் செய்யும் ஒருவகைக் கூத்து. |
(82) |
6671. | 'ஆழமும் அகலம்தானும் அளப்ப அரிது எனக்கும், |
| ஐய! |
| ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை |
| இல்லை; |
| வாழியாய்! வற்றி நீங்கில், வரம்பு அறு காலம் |
| எல்லாம் |
| தாழும்; நின் சேனை உள்ளம் தளர்வுறும்-தவத்தின் |
| மிக்காய்! |