பக்கம் எண் :

396யுத்த காண்டம் 

இளவலும்   இறைவனும்-   இளவலாகிய   இலக்குவனும்,
இறைவனாகிய இராமபிரானும்; இலங்கை வேந்தனும்- இலங்கை
வேந்தனாக   இராமபிரானால்   முடிசூடப்   பெற்ற  வீடணனும்;
அளவறு  நம்  குலத்து அரசும்-  அளவற்றவர்களான  வானர
குலத்தவர்களின் வேந்தனான சுக்கிரீவனும்; அல்லவர்- அல்லாத
மற்ற எல்லோரும்; வளைதரு  கருங்கடல் அடைக்க வம் என-
இலங்கையைச்  சுற்றி வளைத்துக்  கொண்டிருக்கும் கரிய கடலை
அடைத்து   அணை  கட்ட   வாருங்கள்   என்று; தளம்  மலி
சேனையை
- நிறைந்த   கூட்டத்தினரான  வானரப்  படையினரை;
சாம்பன் சாற்றினான்- சாம்பவந்தன் கூறி அழைக்கலானான்.
 

வம் -  வாருங்கள்  சாம்பன் சாற்றினான்  என்பதால்  பறை
அறைந்து தெரிவித்தான் என்பது பொருந்தும். தளம் - கூட்டம்.
 

(4)
 

வானர சேனை மலைகளைக் கொணர்தல்
 

6678.

கரு வரை காதங்கள் கணக்கு இலாதன
இரு கையில், தோள்களில், சென்னி, ஏந்தின,
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள்
வருவன ஆம் என, வந்த வானரம்.
 

கருவரை காதங்கள்  கணக்கு இலாதன-  கணக்கில்லாத
பல காத தூரம்  பரவியுள்ள  கரிய  மலைகளையெல்லாம்;  இரு
கையில் தோள்களில் சென்னி ஏந்தின
- இரண்டு கைகளிலும்,
இரண்டு  தோள்களிலும், தலையிலும்  ஏந்தியனவாக; ஒரு கடல்
அடைக்க
-  ஒரு  கடலை  அடைத்து  அணை  கட்டுவதற்காக;
மற்று ஒழிந்த  வேலைகள்  வருவனவாம்  என-  மற்றுள்ள
ஆறு   கடல்களும்  வருவனபோல்; வானரம்  வந்த- வானரப்
படைகள் வந்தன.
 

கருவரை - கருமை நிறமான மலைகள். 'ஏந்தின  வந்த' என
இயையும், வந்த - வந்தன  வருவனவாம் என - வருவன போல.
மற்று - அசை. ஏந்தின - முற்றெச்சம்.
 

(5)
 

6679.

பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க, நின்று
ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின;
தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின.