பக்கம் எண் :

430யுத்த காண்டம் 

ஓர் பூடும் ஆட்டல் இலாய- ஒரு புல் பூடும் ஆடுதல் இல்லை
ஆயின.
 

ஓட்டர்  -  விரைந்தோடும் தூதுவர். காடு - முல்லை நிலம்,
நாடு,  மருதநிலம்.  நளிர்கடல் - குளிர்ந்த  கடல். கடல்நாடு -
நெய்தல், வானரங்கள் மரங்களையும்  கற்களையும் பூமியெங்கும்
தேடிக்  கொண்டு  வந்து, அணைகட்டக் கடலில் போடுவதால்
பூமியில் எங்கும்  புல், பூடும் ஆடாதனவாயின என்பது கருத்து.
இலாய -  இல்லையாயின  வானரங்களின்  செயலால்  முல்லை, 
மருதம், நெய்தல் ஆகிய நிலங்கள் மயங்கிக் கலந்தன.
 

(64)
 

6738.

வரைப் பரப்பும், வனப் பரப்பும், உவர்
தரைப் பரப்புவது என்ன, தனித் தனி
உரைப் பரப்பும் உறு கிரி ஒண் கவி;
கரைப் பரப்பும், கடற் பரப்பு ஆனதால்.
 

ஒண்கவி - மிகுதியான வானர வீரர்கள்; வரைப் பரப்பும்
வனப்   பரப்பும்
- மலைநிலத்தையும்,  காட்டு  நிலத்தையும்;
உவர் தரைப்  பரப்புவ  தென்ன- கடலையடுத்த நெய்தல்
நிலத்திலே கொண்டு வந்து பரப்புகிறது என்னும்படி; தனித்தனி
உரைப்   பரப்பும்  உறுகிரி 
-  தனித்தனியே  மலைகளைக்
கொணர்ந்து  புகழ்மிகப்  பரப்பி  வைக்கும்  அதனால்; கரைப்
பரப்பு
- கடலை  அடுத்த நிலப்பரப்  பெல்லாம்; கடற் பரப்பு
ஆனதால்
- கடல் தண்ணீர் பொங்கிக் கடலாக மாறியது.
 

ஒண்மை - இங்கு மிகுதி குறித்தது. உவர்த்தரை- கடற்பகுதி.
உரை - புகழ். 'ஒண்கவி தனித்தனி உரைபரப்பும்' என இயைத்து
வானரம்  ஒவ்வொன்றும்  தமது  செயலால் தனித்தனியே புகழ்
பரப்பும் எனலும் பொருந்தும்.
 

(65)
 

6739.

உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை,
முற்ற மூன்று பகலிடை; முற்றவும்,
பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால்;
மற்று இவ் வானம் பிறிது ஒரு வான்கொலோ?
 

ஓங்கல்  இலங்கையை முற்ற- திரிகூட மலையிலிருக்கும்
இலங்கையை அடைய; மூன்று பகலிடை  அணை  உற்றது -
மூன்று    நாட்களிலே  அணை  தகுந்ததாயிற்று;  முற்றவும் -
அணைகட்டி   முற்றுப்   பெற்றவுடன்;    பெற்ற  ஆர்ப்பு
வானரங்களின்