6741. | மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள், |
| பொய்யன் ஈட்டிய தீமை பொறுக்கலாது, |
| ஐயன் ஈட்டிய சேனை கண்டு, அன்பினால் |
| கையை நீட்டிய தன்மையும் காட்டுமால். |
|
மெய்யின் ஈட்டத்து- வாய்மையாகிய செல்வத்தை உடைய; இலங்கையாம் மென்மகள் - இலங்கையாகிய மெல்லியல்புடைய பெண்; பொய்யன் ஈட்டிய தீமை பொறுக்கலாது- பொய்மையாளனாகிய இராவணன் சேர்த்து வைத்த தீமையைப் பொறுக்க மாட்டாதவளாய்; ஐயன் ஈட்டிய சேனை கண்டு- இராமன் தொகுத்த வானர சேனையைப் பார்த்து; அன்பினால் கையை நீட்டிய- இராமபிரானிடம் கொண்ட அன்பினாலே இரு கைகளையும் நீட்டி அழைக்கின்ற; தன்மையும் காட்டும் - தன்மையையும் இந்த அணை காட்டும். |
ஈட்டம் - செல்வம் (ஈட்டப்படுவது ஈட்டம்) அயோத்யாகாண்டத்தில் மிதிலையாகிய மகள், "கைகளை நீட்டி, ஐயனை ஒல்லைவாவென்றழைப்பது போன்றது" என்றது (480) ஒப்பு நோக்கத்தக்கது. |
(68) |
6742. | கான யாறு பரந்த கருங் கடல், |
| ஞான நாயகன் சேனை நடத்தலால், |
| 'ஏனை யாறு, இனி, யான் அலது ஆர்?' எனா, |
| வான யாறு, இம்பர் வந்தது மானுமால். |
|
கானயாறு பரந்த கருங்கடல்- காட்டாறுகள் பலவும் வந்து பரந்துள்ள கரிய கடலில்; ஞான நாயகன் சேனை நடத்தலால்- ஞான நாயகனான இராமபிரானது வானர சேனை நடப்பதால்; ஏனையாறு இனி யானலது ஆர் எனா- என்னைத் தவிர வேறு தகுந்த நெறியாவார் யாருளர் என்று; வானயாறு- விண்ணுலகிலுள்ள ஆகாயகங்கை; இம்பர் வந்தது மானும் - இவ்வுலகிலே வந்திருப்பதை ஒத்து இவ்வணை காணப்படும். |
ஞான நாயகன் - ஞானமே வடிவான் தலைவனான இராமபிரான், "ஞான நாயகன்" என இராமபிரானைப் பின்னும் குறிப்பார் (8642) மானும் - ஒக்கும். இம்பர் - இவ்வுலகம். |
(69) |
6743. | கல் கிடந்து ஒளிர் காசுஇனம் காந்தலால், |
| மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை, |