பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 433

எல் கடந்த இருளிடை, இந்திரன்

வில் கிடந்தது என்ன விளங்குமால்.
 

கல்கிடந்து-  (வானர வீரர்  கடலில் எறிந்த) மலைகளில்
கிடந்து; ஒளிர்  காசினம்  காந்தலால்- ஒளி வீசும் பலவகை
மணித்திரள்கள் ஒளியை  உமிழ்வதால்;  மற்கடங்கள் வகுத்த
வயங்கு அணை
- வானர வீரர்கள் கட்டியதாய் விளங்குகின்ற
அவ்வணை; எல்கடந்த இருளிடை- சூரியன் மறைந்த இரவு
நேரத்திலே; இந்திரன் வில் கிடந்தது என்ன - வானத்திலே
இந்திரவில் கிடந்தது போல; விளங்கும் - விளங்கலாயிற்று.
 

கல்  -  மலை.  மலைகளிலே   கிடந்து  ஒளி வீசும் பன்
மணித்திரளைக் "கல் கிடந்து ஒளிர் காசினம்" என்றார். மற்கடம்
- குரங்கு.   எல் - சூரியன்   'எல்கடந்த இருள்'  என்பதற்குப்
பகலை வென்று விளங்கியஇருள் எனினுமாம்.
 

(70)
 

சேது அமைந்தபின், சுக்கிரீவன் முதலினோர் இராமபிரானுக்குத்
தெரிவித்தல்
 

6744.

ஆன பேர் அணை அன்பின் அமைத்தனர்,
கான வாழ்க்கைக் கவிக் குல நாதனும்,
மான வேற் கை இலங்கையர் மன்னனும்,
ஏனையோரும், இராமனை எய்தினார்.
 

ஆனபேரணை-  இலங்கை  செல்லுதற்கான பெரிய அணை;
அன்பின்  அமைத்தனர்  -  வானர வீரர்கள் அன்பாலே கட்டி
முடித்தனர்;   கான   வாழ்க்கை  -  காடுகளிலே   வாழுகின்ற 
வாழ்க்கையை உடைய; கவிக்குல நாதனும்- வானரக் கூட்டத்தின்
தலைவனான   சுக்கிரீவனும்; மான  வேற்கை- பெருமைமிகுந்த
வேலைப்படையாக கையில் தாங்கியுள்ள; இலங்கையர் மன்னனும்
-  இலங்கையில்   வாழ்பவர்களுக்கு    அரசனான   வீடணனும்;
ஏனையோரும் - மற்றுமுள்ள  அனுமன், சாம்பவந்தன், அங்கதன்
நீலன்,  முதலான   வானரப்படையின்  தலைவர்களும்; இராமனை
எய்தினர்
- இராமபிரானிடம் சென்று அடைந்தனர்.
 

'ஆன்' என்பதற்கு  இலங்கை செல்லுதற்கான என்று விரித்துப்
பொருள் கொள்ளலாம். வானர வீரர்கள் இராமபிரானிடம் கொண்ட
அன்பினால்தான்,   அணைகட்டும்   அரிய   செயலைச்  செய்து
முடித்தார்களே  அல்லாது  வேறு  எவ்விதப்  பயனையும்  எதிர்
பார்த்துச்