சென்ற பாடலில், காவிரியை உவமித்த கவி, இன்னும் மனம் ஆராமையின், இன்னொரு முறையிலும் அச்சேனை காவிரி போன்றது என மேலும் காவிரியை உவமித்து மகிழ்தலால், காவிரியின் மேல், கவிஞர் பெருமான் வைத்துள்ள பேரன்பின் பெருமை புலனாம். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐவகை நிலப்பாகுபாடும், அவற்றில் வாழும் மக்களைப் பாடுபொருளாகக் கொண்ட அகப் புறப் பொருளும் தமிழ் நாட்டுக்கே உரியவையென உலக இலக்கியச் |