சான்றோர் ஒரு முகமாகப் புகழ்தலின் "ஓதிய குறிஞ்சி முதலாய" என்றார் - ஓதுதல் - புகழ்ந்து பாடுதல். அருந்துவன - வினையாலணையும் பெயர் வானர சேனைக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் மிகுதியாகக் கொண்டு செல்லப்பட்டன. என்பதைப் போகிற போக்கில் உவமை வாயிலாக உரைத்தார். |
(7) |
6753. | ஆயது நெருங்க, அடி இட்டு, அடி இடாமல், |
| தேயும் நெறி மாடு, திரை ஊடு, விசை செல்ல, |
| போய சில பொங்குதொறு பொங்குதொறு பூசல் |
| பாய் புரவி விண் படர்வபோல், இனிது பாய்வ. |
|
ஆயது- அந்த வானர சேனையில்; நெருங்க அடிஇட்டு- நெருக்கத்தினால், ஓர் அடியைஇட்டு; அடி இடாமல் - அடுத்த அடியை எடுத்துக் கீழே வைப்பதற்கு இயலாமல் (இன்னொருவரின் அடியிடப்படுதலால்); நெறிதேயும் - (செல்ல) வழியின்றிப் போகும்; மாடுதிரை ஊடு - (ஆதலால்) அருகேயுள்ள கடல் அலைகளின் இடையே; விசை செல்ல- விரைவாகச் செல்ல; சில போய- சில வானரங்கள் போயின; பொங்க தொறு பொங்கு தொறு - (அப்படிச் சென்ற வானரங்கள்) (கடல் அலைகள்) பொங்கி எழுந்தோறும் எழுந்தோறும்; பூசல் பாய்புரவி - போரில் பாய்கின்ற குதிரைகள்; விண் படர்வ போல்- வானை நோக்கிப் பாய்வது போல; இனிது பாய்வன- இனிதாகத் தாவிச் செல்வன ஆயின. |
வானர சேனையின் நெருக்க மிகுதியை உரைத்தவாறு. "அணையிடமில்லாமல், கடலுக்குள்ளே போகின்ற வானரங்கள் திரை பொங்குந்தோறும் குதிரை ராவுத்தர் ஒத்தன" என்பது நயமான ஒரு பழைய உரை. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. |
(8) |
6754. | மெய்யிடை நெருங்க, வெளியற்று அயலில் வீழும் |
| பொய் இடம் இலாத, புனலின் புகல் இலாத, |
| உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார் |
| கையினிடை சென்று, கரை கண்ட கரை இல்லை. |
|
மெய்யிடை நெருங்க- (போய வழியெல்லாம்) குரங்குகளின் உடம்பே இடம் முழுதும் நிறைந்திருத்தலால்; வெளியற்று - செல்லும் வெற்றிடம் அற்று; அயலில் வீழும் பொய் இடம் இலாத- பக்கத்தில் வீழ்வதற்கும் காலியிடம் பெறாதனவாய்; புனலின் புகல் இலாத- (நெருக்கில் சிக்குண்டு கடல்) நீரிலும் விழ |