பக்கம் எண் :

490யுத்த காண்டம் 

தானுடை வரத்தை எண்ணி, தருமத்தின்

தலைவர்தாமே

 

மானுட வடிவம் கொண்டார்" என்பது ஓர் வார்த்தை

இட்டார்.

  

கான் இடை வந்தவாறும்- (அந்த இராமபிரான்) வனத்திற்கு
வந்த   விதமும்;  வானவர்   கடாவவே ஆம்- தேவர்களின்
உந்துதலினாலே யாம்; மீன் உடை  வேலை  விலங்கல் மேல்
அகழி
   -  மீன்களையுடைய   கடலை  அகழியாகக்  கொண்ட
திரிகோண  மலையின்  மேல் அமைந்த; இலங்கை வேந்தன் -
இலங்கை  நகரின்  வேந்தனாகிய  இராவணன்; தான்   உடை
வரத்தையெண்ணி
- தான்  அடைந்துள்ள  வரத்தினைக் கருதி;
தருமத்தின்  தலைவர் தாமே  -  அறத்தின் நாயகனான பரம்
பொருளே; மானுட வடிவம்  கொண்டார் - மானிட வடிவத்தை
ஏற்று (இராமனாக) வந்துள்ளார்;என்பது ஓர் வார்த்தை இட்டார்
- என்பதான ஒரு மொழியையும் சொன்னார்கள்.
 

விலங்கல்-மலை.  

(79)

  

6825.

' "ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த"

என்றார்;

 

"தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய, 

தக்கோன்

 

ஏயின தூதன் எற்ற, பற்று விட்டு, இலங்கைத் 

தெய்வம்

போயினது" என்றும் சொன்னார்; "புகுந்தது, போரும்"

என்றார்.

  

ஈங்கு- இவ்விலங்கை நகருக்கு; ஆயிரம் உற்பாதங்கள் -
ஆயிரமாயிரம்  கெடுகுறிகள்; வந்து அடுத்த  என்றார் - வந்து
நிகழ்ந்துள்ளன  என்றார்கள்; தாயினும்  உயிர்க்கு   நல்லாள்
- அன்னையைக்  காட்டிலும் உயிர்க்குலத்துக்கு  அன்பு செய்யும்
நல்லவளாகிய  சீதை; இருந்துழி  அறிய- இருக்கும்  இடத்தை
யறிந்து கொள்ள; தக்கோன் - தகுதியில்  சிறந்த   இராமபிரான்;
ஏயின   தூதன்  -   அனுப்பிய  தூதனாம் அனுமன்; எற்ற-
தாக்கியதனால்;   பற்று   விட்டு  -  காவல்  தொழிலை நீத்து; 
இலங்கைத் தெய்வம்