போயினது - இலங்கையின் காவல் தெய்வமாகிய இலங்கிணியும் (இலங்கையை விட்டு) நீங்கி விட்டாள்; என்றும் சொன்னார் - என்பதும் உரைத்தார்கள்; "புகுந்தது போரும் என்றார்" - யுத்தம் (இலங்கைக்குள்) (அனுமன் வடிவில்) நுழைந்து விட்டது என்றும் சொன்னார்கள். |
உலகத்தாய் உயிர்கட்கு, ஒரு பிறப்புக்கே அன்பு காட்டுவாள்; பிராட்டி பிறவி தோறும் அன்பு காட்டிப் பேணும் பெருந்தாயாம் உலோகமாதா ஆதலின் "தாயினும் உயிர்க்கு நல்லாள்" எனப்பட்டாள். |
(80) |
6826. | ' "அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் |
| அரக்கர் என்ன, |
| நம் பரத்து அடங்கும் மெய்யன், நாவினில் பொய் |
| இலாதான், |
| உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த |
| ஞானத் |
| தம்பியே சாற்றிப் போனான்" என்பதும் சமையச் |
| சொன்னார். |
|
நம் பரத்து அடங்கும் மெய்யன்- உடம்பால் நம் இனத்தைச் சார்ந்தவனும்; நாவினில் பொய் இலாதான் - (ஆனால், நம் நிலைக்கு மாறாக) நாவால் பொய்யே உரையாதவனும்; உம்பர் மந்திரிக்கும் மேலா - தேவர்களின் அமைச்சனான பிருகற்பதியைக் காட்டிலும் மேலாக; ஒரு முழம் உயர்ந்த - ஒரு முழம் உயர்ந்தவனும் ஆன; ஞானத் தம்பியே - (உன்) ஞானத் தம்பியாகிய வீடணனே; அரசொடும் அரக்கர் - அரசாளும் (இராவணனாகிய) உன்னோடும் சேர்ந்து (எல்லா) அரக்கர்களும்; அம்பினுக்கு இலக்கம் ஆவார் என்ன- (இராமபிரானின்) கணைகளுக்கு இலக்காகி அழிவார்கள் என்று; சாற்றிப் போனான் - உரைத்து வெளியேறினான்; என்பதும் சமையச் சொன்னார் - என்னும் செய்தியையும் பொருந்தக் கூறினார்கள். |
பரம் - சார்பு, இனம். உடம்பால் நம் இனத்தவன் ஆயினும், நாவிலும் ஞானத்திலும் நமக்கு அப்பாற்பட்டவன் வீடணன் என்பது குறிப்பு. தேவர்க்கு அமைச்சனும் குலகுருவுமான பிருகற்பதி எனப்படும் வியாழபகவான் கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதி என்பது சோதிட நூல் துணிபு. அத்தகைய வியாழ பகவானிலும் ஒரு முழம் உயர்ந்த |