கடும்போரினை விரும்பி; காந்தினர்- மனக்கொதிப்புடையவராய்; என்னைக் கலந்தபோதும் - என்னை என் பகைவர்கள் நெருங்கின போதும்; சீதை தன் திறத்தின்- (அப்போர்) சீதையைப் பெறும் பொருட்டாக என்றால்; அமர்த் தொழில் திறம்புவேனோ?- போர் இடுவதிலிருந்தும் பின் வாங்குவேனோ? (வாங்கேன்!). |
தன் திறம் உணராது என்னை எதிர்க்க வந்துளர் ஆதலின் இராமலக்குவரைப் "பேதை மானிடவர்" என்றான். திறம்புதல் - பின்னிடுதல். காந்துதல்-நெஞ்சு கொதித்தல். |
(84) |
6830. | 'ஒன்று அல, பகழி, என் கைக்கு உரியன; உலகம் |
| எல்லாம் |
| வென்றன; ஒருவன் செய்த வினையினும் வலிய; |
| "வெம் போர் |
| முன் தருக" என்ற தேவர் முதுகு புக்கு அமரில் |
| முன்னம் |
| சென்றன; இன்று வந்த குரங்கின்மேல் |
| செல்கலாவோ? |
|
என் கைக்கு உரியன - என் கரங்களில் உலவுகின்றனவும்; உலகம் எல்லாம் வென்றன - உலகங்கள் யாவையும் வென்று தீர்த்தனவும்; ஒருவன் செய்த வினையினும் வலிய- (தப்பாமல் தாக்குவதில்) ஒருவன் புரிந்த வினைகளை விட வலிமை வாய்ந்தனவும்; முன் வெம்போர் தருக என்ற தேவர்- (என்) முன் வந்து போர் தருக என்று எதிர்நின்ற தேவர்கள்; முதுகு புக்கு - (பின்னிட்டு ஓடுமாறு) முதுகுகளில் ஊடுருவி; அமரில் முன்னம் சென்றன - போர்க்களத்தில் அவர்களின் முன்னே சென்றனவுமாகிய; ஒன்று அல பகழி- ஒன்றல்லாத மிகப் பலவான அம்புகள்; இன்று வந்த குரங்கின்மேல் - இப்போது வந்துள்ள குரங்குகளின் மேல்; செல்கலாவோ? - செல்லும் வலிமையற்றன ஆகி விடுமோ? (விடா.) |
(85) |
6831. | 'சூலம் ஏய் தடக் கை அண்ணல்தானும், ஓர் |
| குரங்காய்த் தோன்றி |
| ஏலுமேல், இடைவது அல்லால், என் செய வல்லன் |
| என்னை? |