பொறிபட - என் கரங்களில் உள்ள அம்புகள் தீப்பொறிகளைச் சிந்தியவாறு; சுடர்கள் தீய - (ஞாயிறு, திங்கள், தீ) எனும் முச்சுடர்களும் கரிந்து போகுமாறு; போவன - ஏகவல்லன; (அவ்வம்புகள்) மறிகடல் கடைய - அலைகின்ற கடலைக் கடையும்போது; போக்கிலாத வந்த மணி கொல் ஆம்? - போகும் இடம் அறியாமல் (திருமால்மார்பினை வந்தடைந்த கௌத்துவ) மணியாகுமோ? (ஆகாது); அறிகிலை போலும் - இதனை நீ அறியாய் போலும்! | "நேமியானே வந்து எதிர்ப்பினும்" என வரவேண்டிய தேற்றேகாரம் மறைந்து நின்றதால் விரிக்கப் பெற்றது. "போக்கு அறு பனுவல்" (தொல். பாயிரம்) என்பதில், போக்கு குற்றம் எனும் பொருளில் வந்துள்ளது. நேமி - ஆழிப்படை, சக்கரம். மார்பில் பூணவாளி மணியன்று என்பதனால் அது மார்பைப் பிளக்கும் என்பது குறிப்பு. திருமால், புறமுதுகிட்டதாக இராவணன் முன்பும் (6182, 6186) உரைத்துள்ளான். | (87) | 6833. | 'கொற்றவன், இமையோர் கோமான், குரக்கினது | | உருவம் கொண்டால், | | அற்றை நாள், அவன்தான் விட்ட அயிற்படை | | அறுத்து மாற்ற, | | இற்ற வான் சிறைய ஆகி விழுந்து, மேல் எழுந்து | | வீங்காப் | | பொற்றை மால் வரைகளோ, என் புய நெடும் | | பொருப்பும்? அம்மா!' | | கொற்ற வாள் இமையோர் கோமான்- வெற்றியைக் கொண்ட வாள் ஏந்தும் தேவர்தலைவனான இந்திரன்; குரக்கினது உருவம் கொண்டால் - குரங்கினுடைய வடிவம் கொண்டுள்ளான் என்றால்; அற்றை நாள் - (மலைகளின் சிறகுகளை அரியத் தொடங்கிய) அக்காலத்தில்; அவன் விட்ட- அவ் இந்திரன் விடுத்த; அயிற் படை - கூரிய வச்சிராயுதம்; அறுத்து மாற்ற- அறுத்து வேறாக்கியதால்; வான் இற்ற சிறைய ஆகி - வானில் (பறப்பதற்கு இயலாத) ஒடிந்த சிறகுகளையுடையனவாகி; விழுந்து - கீழே வீழ்ந்து; மேல் எழுந்து வீங்கா- மேல் கிளம்பிப் பறக்க இயலாத; மால் பொற்றை வரைகளோ - பெருமைக்குரிய சிறு குன்றுகளோ; என்புய நெடும் பொருப்பும்? - என்னுடைய தோள்களாகிய பெருமலைகளும்? |
|
|
|