6837. | செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு |
| செல்ல, |
| இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடுங் கமலக் |
| கையான். |
| பொரு வலி வய வெஞ் சீயம் யாவையும் புலியும் |
| சுற்ற, |
| அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரிஅரசு |
| அனையன் ஆனான். |
|
செருமலிவீரர் எல்லாம்- போர்புரியும் தன்மையுடைய வீரர் யாவரும்; சேர்ந்தனர் மருங்கு செல்ல - திரண்டு பக்கத்தே செல்ல; இருதிறல் வேந்தர்- இரண்டு திறமை வாய்ந்த சுக்கிரீவன், வீடணன் என்ற அரசர்க்கரசர்; தாங்கும்- பற்றி தாங்கிச் செல்லும்; இணை நெடும் கமலக் கையான் - இரண்டான நீண்ட செந்தாமரையனைய கைகளையுடைய இராமபிரான்; பொருவலி வயவெஞ்சீயம் - போரிடும் வலிமை வாய்ந்த திறல் மிக்க கொடிய சிங்கம் ஒன்று; யானையும் புலியும் சுற்ற - யானைகளும் புலிகளும் சுற்றிவர; ஓர் அரி அரசு- ஒப்பற்றதொரு இராச சிங்கம்; அருவரை இவர்வது அனையன் ஆனான்- அரிய குன்று ஒன்றின் மேல் ஏறுவது போன்றவன் ஆனான். |
இந்தப் பாடலில் வரும் உவமைக் காட்சியைத் திரிசடை கனவுபற்றிய பாடலொடு (5118) இணைத்துக் காண்க. |
(2) |
6838. | கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனை கடல் |
| உலகம் எல்லாம் |
| புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்தம் |
| புரமும்,பொற்பும், |
| சிதைவு செய் குறியைக் காட்டி, வட திசைச் சிகரக் |
| குன்றின், |
| உதயம்அது ஒழியத் தோன்றும், ஒரு கரு ஞாயிறு |
| ஒத்தான். |
|
கதம் மிகுந்து - சினம் ஏறி; இரைத்துப் பொங்கும்- அலையொலித்துப் பொங்குகின்ற; கனைகடல் உலகம் எல்லாம்- ஆர்ப்பொலி மிக்க கடல் சூழ்ந்த உலகம் யாவும்; புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்தம் - தனதகத்தே அழுந்தி மறையுமாறு செய்யும் இருளைப்போலே (பாவமாகிய இருளால்) பொங்கி |