பக்கம் எண் :

 இலங்கை காண் படலம் 501

(உலகை அழிக்க உள்ள) அரக்கர்களுடைய; புரமும் பொற்பும்-
நகராகிய இலங்கையும் அதன்  அழகும்; சிதைவு செய்குறியைக்
காட்டி
-  அழியப்  போகின்ற   அடையாளத்தைக் காண்பித்து;
உதயமது  ஒழிய  -  உதயகிரிச் சிகரத்திலே  உதிப்பதை நீக்கி;
வடதிசைச்   சிகரத்தின்  -  வடதிசைக்கண்   உள்ள   ஒரு
மலைச்சிகரத்தில்;    தோன்றும்   கரு  ஞாயிறு ஒத்தான் -
உதிக்கின்ற  ஒரு  கரிய   சூரியனைப்   போன்றவன்  ஆனான்
(இராமபிரான்).
 

கதிரவன்    உதய   காலத்தே,  சுவேலமலைமேல்   நின்ற
இராமபிரானை, வடக்கே உதித்த கரு ஞாயிறு  என வருணித்தார்.
கருஞாயிறு  இராமனுக்கு  உவமை.  "கட்டார்சிலைக் கருஞாயிறு
புரைவான்" (9406); "கண்தாமரை  போல் கருஞாயிறு என" (2610)"
செந்தண் கமலக்கண் சிவந்த வாயோர் கருஞாயிறு, அந்தமில்லாக்
கதிர் பரப்பி அலர்ந்தது. ஒக்கும் அம்மானே!" (திருவாய்: 8: 5: 7)
என  வருவன  காண்க. உதயமது அது பகுதிப் பொருள் விகுதி.
தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. 
 

(3)
 

6839. 

துமிலத் திண் செருவின் வாளிப் பெரு மழை  

சொரியத் தோன்றும்

 

விமலத் திண் சிலையன், ஆண்டு ஓர் வெற்பினை 

மேய வீரன்,

அமலத் திண் கரமும் காலும் வதனமும் கண்ணும்  

ஆன,

கமலத் திண்காடு பூத்த காள மா மேகம் ஒத்தான். 
 

துமிலத்  திண்செருவின் -  பேர்ஒலியுடன்  எழும்  வலிய 
போரில்;  வாளிப்  பெருமழை-  அம்புகளாகிய   பெரியமழை;
சொரியத்   தோன்றும்- பொழியுமாறு   தோன்றும்;  விமலத்
திண்சிலையன்
  -  மாசற்ற  திண்ணிய  வில்லை  ஏந்தியவனாகி;
ஆண்டு ஓர் வெற்பினை மேயவீரன் - அங்கே ஒரு மலையை
யடைந்தவனாகிய   இராமபிரான்;  அமலத்திண் கரமும் காலும்
வதனமும் கண்ணும் ஆன
- தூய்மை பொருந்திய திருக்கைகளும்,
திருவடிகளும்,   திருமுகமும்   திருக்கண்களும்  ஆன; கமலத்
திண்காடு பூத்த
-  வளமான  தாமரைக்காடு  பூத்துக்  கிடக்கிற;
காளமாமேகம் ஒத்தான் - கரிய பெரிய காளமேகம் போன்றவன்
ஆனான்.
 

துமிலம் - பேரொலி,  ஆரவாரம்.  தாமரைக்காடு அனையான்
இராமன்.  ஒப்பு:  (திருவாய்: 8: 5: 1).  நீல  மேனியிடை  செந்நிற
உறுப்புகள்