இயைந்து பொலிவதைப் புலப்படுத்தும் இப்பாடல் படிமம். கம்பரைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது; அவர் போற்றிய படிமத்துக்கு மூலம் ஆழ்வார் அருளிச் செயலே. |
(4) |
6840. | மல் குவடு அனைய திண் தோள் மானவன், |
| வானத்து ஓங்கும் |
| கல் குவடு அடுக்கி வாரிக் கடலினைக் கடந்த, |
| காட்சி |
| நல் குவடு அனைய, வீரர் ஈட்டத்தின் நடுவண் |
| நின்றான். |
| பொன் குவட்டு இடையே தோன்றும் மரகதக் |
| குன்றம் போன்றான். |
|
வானத்து ஓங்கி கல் குவடு அடுக்கி- ஆகாயத்தளவு உயர்ந்த கல்மலைகளை யடுக்கி; வாரி கடலினைக் கடந்த- நீர் வருகையையுடைய கடலினைக் கடந்த; நல்குவடு அனைய காட்சி வீரர் - நல்ல மலைகளை ஒத்தவராய்க் காட்சி தரும் வானர வீரர்களின்; ஈட்டத்தின் நடுவண் நின்றான்- கூட்டத்தில் நின்றவனான; மல்குவடு திண்தோள்- வலிய சிகரத்தை ஒத்த திண்ணிய தோள்களையுடைய; மானவன்- மனுக்குலத்தில் தோன்றிய இராமபிரான்; பொன்குவடு இடையே தோன்றும்- பொன் மலைகளின் நடுவே காணப்படும்; மரகதக் குன்றம் போன்றான் - மரகத மலையைப் போன்று விளங்கினான். |
கற்குவடுகளைச் சுமந்த அவர்கள் தோள்கள் பொற்குவடுகள் ஆயின, அப்பொற்குவடுகளுக்கிடையே மரகதமலையென இராமபிரான் நின்றான் என்பதாம். "எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்" (திருவாய் : 2: 5: 4); "வள்ளலே! மதுசூதனா! மரகத மலையே! (திருவாய் : 2: 6: 4) என நம்மாழ்வார் மரகத மலை எனப் பரவுதல் இங்கு நினைவு கூரத் தகும். |
(5) |
இராமன், இலங்கையின் சிறப்பை இளவலுக்குக் காட்டிக் கூறுதல். |
6841. | அணை நெடுங் கடலில் தோன்ற, ஆறிய சீற்றத்து |
| ஐயன், |
| பிணை நெடுங் கண்ணி என்னும் இன்னுயிர் பிரிந்த |
| பின்னை, |