பக்கம் எண் :

504யுத்த காண்டம் 

எழுந்த  உவமைகளைச்  சொல்லிப்  புகழத் தொடங்கிய பொழுது
(எல்லாம்); இந்திரன்  இருக்கை என்பார் -  (உவமைப்பொருள்
ஆக) தேவர் தலைவனாகிய இந்திரனின் இருப்பிடமான அமராவதி
நகர்    என்பார்கள்;    இலங்கையை   எடுத்துக்காட்டார் -
(அதனினும்  உயர்ந்த)  (இந்த)  இலங்கை  மாநகரை   உவமைப்
பொருளாக  எடுத்துக் காட்டமாட்டார்கள்; அந்தரம்  உணர்தல்
தேற்றார்
  -  (அந்த  அமராவதி  நகருக்கும்  இந்த  இலங்கை
மாநகருக்கும்  உள்ள) வேறுபாட்டை   அப்புலவர்கள்  உணரும்
தெளிவுடையார் அல்லர் (போலும்!).
 

பேர் உவமை - உவமேயத்தைக் காட்டிலும் உயர்ந்த உவமை.
"உயர்ந்ததன்   மேற்றே   உள்ளுங்காலை"   (தொல்.  உவம.  3)
அந்தரம் - வேறுபாடு.  புலவர்   இலங்கைக்கும் அமராவதிக்கும்
வேறுபாடு   தெரியின்,   நம்திருநகரே   யாதி    வேறு    உள
நகர்கட்கெல்லாம்   இந்திர    இருக்கையாகிய    அமராவதியை
உவமிப்பதை    விடுத்து,   இந்த    இலங்கை    நகரத்தையோ
எடுத்துக்காட்டுவர் என்பது கருத்து. 
 

(7)
 

6843.

'பழுது அற விளங்கும் செம் பொன் தலத்திடைப் 

பரிதி நாண

 

முழுது எரி மணியின் செய்து முடிந்தன, 

முனைவராலும்

எழுத அருந் தகைய ஆய, மாளிகை இசையச் 

செய்த

 

தொழில் தெரிகிலவால், தங்கண் சுடர் நெடுங் 

கற்றை சுற்ற.
 

பழுது அறவிளங்கும் செம்பொன் தலத்திடை- குற்றமின்றி
ஒளிரும்  சிவந்த  பொன்னினால்  ஆன  நிலத்தில்; பரிதி  நாண
-   சூரியனும்  நாணமுறும்படி;  முழுது  எரிமணியின்  செய்து
முடிந்தன
  -  முற்றிலும்  ஒளிர்கின்ற  இரத்தினங்களால்  செய்து
முடிக்கப் பெற்றனவும்;முனைவராலும் எழுதருந்தகைய மாளிகை
-  முதிர்ந்த  அறிவினராலும் வரைவதற்கு இயலாத மாளிகைகளில்;
இசையச்   செய்த    தொழில்  -   பொருந்துறச் செய்துள்ள
வேலைப்பாடுகள்;   தங்கண்   சுடர்   நெடுங்கற்றை சுற்ற -
அவற்றிலுள்ள   (எரிமணிகளின்) ஒளிவீச்சு பார்ப்பார்  விழிகளைக்
கூசச் செய்வதனால்; தெரிகில- கட்புலன் ஆகவில்லை.
 

"பொன் கொண்டிழைத்த?  மணியைக்  கொடு பொதிந்த? என்
கொண்டிழைத்த எனத்தெரிகிலாத" (கம்ப. 4835) என்பார் முன்னும். 
 

(8)