பக்கம் எண் :

506யுத்த காண்டம் 

ஆக -  அன்னம்  போன்று ஒளிர; பாசு அடைப் பொய்கை -
பசிய இலைகள் பரவிய பொய்கைகளில்;பூத்த பங்கயம் நிகர்ப்ப
பாராய்! 
-    பூத்துக்    கிடக்கிற     தாமரை    மலர்களைப்
போன்றிலங்குவதைப் பாராய்!
 

காசு-காரிய ஆகுபெயராய் பொன்னைக் குறித்தது.இங்கு அடை
- நெருக்கத்தைக் குறித்தது. பாசு அடை-இங்கு அடை இலையைக்
குறித்தது.
 

மரகதத்தளம்  பொய்கை யாகவும், செம்பொற் கூரைமாடங்கள்
செந்தாமரைகளாகவும்,   அவற்றின்   மீதுள்ள  வெள்ளி  வீடுகள்,
செந்தாமரை    மலர்களின்      மேலுள்ள   அன்னங்களாகவும்
மனக்கண்ணால் கண்டு  நமக்கும் காட்டுகின்றார்  கவிஞர்  பிரான்.
அடை எனும்  சொல் வெவ்வேறு  பொருள்களில் அமைய  வந்த
திரிபு அணியாம். 
 

(10)
 

6846.

'தீச் சிகை சிவணும் சோதிச் செம் மணிச் செய்த

தூணின்

 

தூச் சுடர் மாடம் ஈண்டித் துறுதலால், கருமை 

தோன்றா

 

மீச் செலும் மேகம் எல்லாம், விரி சுடர் இலங்கை 

வேவ,

 

காய்ச்சிய இரும்பு மானச் சேந்து ஒளி கஞல்வ, 

காணாய்!

 

தீச் சிகை சிவணும் சோதி- அக்கினிக் கொழுந்து போலும்
ஒளியினையுடைய;   செம்மணிச்   செய்ததூணின்  -  சிவந்த
மாணிக்கங்களைப்   பதித்துச்    செய்யப்    பெற்ற   தூண்கள்
நாட்டப்பெற்ற;  தூச்சுடர்   மாடம்  ஈண்டித்  துறுதலால் -
தூய்மையான ஒளிமிக்க  மாடங்கள்  நெருங்கிச் சுடர் விடுதலால்;
கருமை தோன்றா - கருநிறம் தோன்றாமல்; மீச்செலும் மேகம்
எல்லாம்
- ஆகாயத்தில் பரவிச் செல்லும்  மேகங்கள்  எல்லாம்;
விரிசுடர்  இலங்கை  வேவ- விரிந்து   பரவும்   ஒளியுடைய
இலங்கை (அநுமனால் தீயிடப்பட்ட அன்று) எரிந்து போகும்போது;
காய்ச்சிய  இரும்பு மான- (அப்பெருந்,தீயிற்) காய்ச்சப்  பட்ட
இரும்பினைப் போல; சேந்து ஒளி கஞல்வ காணாய்- செந்நிறம்
பெற்று ஒளி மிக விளங்குவதைக் காண்பாயாக.
 

தீச்சிகை - அனற்கொழுந்து.  சிவணல் - ஒத்தல்.  இலங்கை
உலைக்கூடமாகவும்   மாடங்கள்   உலையாகவும்,  செம்மணிகள்
பதித்த