பக்கம் எண் :

508யுத்த காண்டம் 

வீசு பொன் கொடிகள் எல்லாம், விசும்பினின் விரிந்த

மேக-

 

மாசு அறத் துடைத்து, அவ் வானம் விளக்குவ 

போல்வ மாதோ!

 

பூசல் வில் குமர ! - போரிடற்குரிய வில் ஏந்தும் குமரனே!
புகழ் அற விளங்கும் பொற்பின்- குற்றம் நீங்குமாறு
விளங்கும் அழகினையுடைய; காசு உடைக் கதிரின் கற்றை-
(கொடிக்கம்பங்களில் பதிக்கப் பெற்றுள்ள இரத்தின)
மணிகளால் ஆகிய ஒளித் தொகுதிகளையுடையனவாய்; கால்களால்
கதுவுகின்ற
- காற்றால் பற்றப்பட்டு; வீசுபொன் கொடிகள்
எல்லாம்
- அசைகின்ற அழகிய கொடிகள் யாவும்; விசும்பின்
விரிந்த
- விண்ணில் பரவியுள்ள; மேக மாசு அறத்துடைத்து-
மேகங்கள் என்னும் அழுக்கினைத்துடைத்தெடுத்து; அவ்வானம்
விளக்குவ போல்வ நோக்காய்
- அவ்விண்ணைத் துலக்குவன
போன்றுள்ளமையைக் காண்பாயாக.
 

புகர்-குற்றம்.
   

(13)
 

6849.

'நூல் படத் தொடர்ந்த பைம் பொன் சித்திரம்

நுனித்த பத்திக்

 

கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் 

கூட்டி,

 

சால்பு அடுத்து, அரக்கன் மாடத் தனி மணி 

நடுவண் சார்த்தி,

மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று  

உளது-இம் மூதூர்.

 

இம் மூதூர்- இத்தொன்மை வாய்ந்த இலங்கை; நூல் படத்
தொடர்ந்த
- (சிற்பிகளால் கோணல் என்பதேயின்றி) நூல்
இட்டு நேர் வரிசையில் உள்ளனவும்; சித்திரம் நுனித்த
பத்தி
- ஓவியங்கள் நுட்பமாகத் தீட்டப்பட்ட
வரிசையானவையும் ஆகிய; கோல் படு மனைகள் ஆய குலமணி
எவையும் கூட்டி
- அழகமைந்த வீடுகள் என்னும் சிறந்த மணிகள்
யாவற்றையும் இணைத்து; சால்பு அடுத்து- (ஒரு கோவையாக)
பொருந்தும்படி அமைத்து; அரக்கன் மாடத் தனிமணி நடுவண்
சார்த்தி
- அரக்கர் கோனாகிய இராவணனது அரண்மனையாகிய
நாயகமணியினை நடுவிலே சார வைத்து; மால்