பக்கம் எண் :

 இலங்கை காண் படலம் 509

மால்  கடற்கு  இறைவன் - பெருங்கடல்களுக்கு அரசனாகிய
வருணதேவன்; பூண்ட  மாலை  போன்று உளது - அணிந்து
கொண்ட மணிமாலை போன்று உள்ளது.
 

கோலம், கோல்  என நின்று அழகு எனும் பொருள் தந்தது.
சால் படுத்தல்-பொருந்தும் படி வைத்தல். இந்திரனே  சாலுங்கரி.
(குறள் 25) எனுமிடத்து. சாலுதல் பொருந்துதல் எனும் பொருளில்
வருதல் காண்க.
 

சிற்ப   சாத்திர  வல்லுநர்கள்  நூலிட்டு, நேர்பட அமையும்
தெருக்களோடும்,     ஊரின்     நடுவே    அமையும்   அரச
மாளிகையோடும் நகர்களை அமைக்கும் திறத்தை நன்குணர்ந்தவர்
கவிஞர்பிரான்.
 

"நூல் அறிபுலவர் நுண்ணிதிற் கயிறு இட்டுத்தே எங்கொண்டு
தெய்வம்   நோக்கிப்  பெரும்  பெயர்  மன்னர்க்கு ஒப்ப மனை
வகுத்து"  (நெடுதல்  76-79)   எனும்  சங்கப்  பாடற் சான்றால்,
இந்நிலத்தில் ஊர் அமைப்புக்கலையும் மனையமைப்புக் கலையும்
தொன்மைச் சிறப்பொடு திகழும் பாங்கு புலனாம். 
 

(14)
 

6850.

'நல் நெறி அறிஞ ! நோக்காய்--நளி நெடுந்

தெருவின் நாப்பண்

பல் மணி மாடப் பத்தி நிழல் படப் படர்வ, பண்பால்

 

தம் நிறம் தெரிகிலாத, ஒரு நிறம் சார்கிலாத,

இன்னது ஓர் குலத்த என்று புலப்படா, புரவி 

எல்லாம்.
 

நல்  நெறி  அறிஞ !  -    சன்மார்க்கம்    இன்னதென
உணர்ந்தொழுகும் அறிவு  சான்றோனே! நளி நெடுந் தெருவின்
நாப்பண்
-  பெருமை  நிறைந்த  நீண்ட  தெருக்களின் நடுவே;
பல்மணி மாடப் பத்தி நிழல் படப்படர்வ - பற்பல மணிகள்
இழைத்து  கட்டப்பட்டுள்ள  மாடமாளிகை  வரிசையின் ஒளிகள்
(தம்மீது)   படச்   செல்கின்றவையான;   புரவி   எல்லாம்-
குதிரைகள் யாவும்; பண்பால்   தம்   நிறம்  தெரிகிலாத -
இயற்கையாக அமைந்த தமது நிறம் அறிய இயலாமல்;ஒரு நிறம்
சார்கிலாத
-  ஒரு  குறிப்பிட்ட   நிறத்தையும்   கொள்ளாமல்;
இன்னதோர் குலத்த என்று புலப்படா நோக்காய் -  இன்ன
நிறம் உடையவை   இவை   என்று அறிய இயலாதவை  ஆயின 
(என்பதைப்) பாராய்.
 

இலக்குவன் இந்நெறி மேற் கொண்டு ஒழுகுவான் என்பதனை,
"வளையாவரு நன்னெறி  நின்னறிவு  ஆகும் அன்றே" (1730) என
நகர் நீங்கு படலத்திலும் குறித்தமை நினைக. நளி - பெருமை.
 

(15)