பக்கம் எண் :

510யுத்த காண்டம் 

6851.

'வீர ! நீ பாராய்-மெல்லென் பளிங்கினால்

விளங்குகின்ற,

 

மாரனும் மருளச் செய்த மாளிகை, மற்றோர் சோதி

 

சேர்தலும் தெரிவ; அன்றேல், தெரிகில; தெரிந்த 

காட்சி

நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை.
 

வீர ! - வீரனாகிய இலக்குவனே! மெல் என் பளிங்கினால்
விளங்குகின்ற
- மெல்லிய பளிங்குக் கற்களினால் ஒளிர்கின்றனவும்;
மாரனும்  மருளச்  செய்த மாளிகை - மன்மதனும் மயங்குமாறு
அமைந்துள்ளனவுமான     மாளிகைகள்;   மற்று   ஓர்  சோதி 
சேர்தலும்  தெரிவ
- வேறு   ஓர்   ஒளி  (தம்மீது) பட்டவுடன் 
கண்ணுக்குத்      தெரிவனவாயும்;    அன்றேல்   தெரிகில -
ஒளிபடாவிடில், கண்ணுக்குத் தெரியாதனவுமாயும்; தெரிந்த காட்சி
- விளங்குகின்ற   காட்சியானது;   நீரினால்  இயன்ற என்ன -
நீரினால் அமைந்தவை   (இவை)  என்னுமாறு; நிழல்  எழுகின்ற 
நீர்மை நீ பாராய்
- ஒளிதோன்றுகின்ற தன்மையை நீ பார்ப்பாயாக.
 

தனக்கென்று  ஒரு  தனி  நிறமில்லாது, ஆன்மாவைப் போலச்
சார்ந்ததன் வண்ணம் ஆவது நீர்க்கு இயல்பு. பம்பையின் நீரினைப்
பளிங்குக்கு முன்னும் (3710) உவமிப்பார். 
 

(16)
 

6852.

'கோல் நிறக் குனி வில் செங் கைக் குமரனே! 

குளிர் வெண் திங்கள்

 

கால் நிறக் கதிரின் கற்றை தெற்றிய ஆய காட்சி

 

வால் நிறத் தரளப் பந்தர், மரகதம் நடுவண் வைத்த,

 

பால் நிறப் பரவை வைகும் பரமனை நிகர்ப்ப, 

பாராய்!

 

கோல்நிறக் குனிவில் செங்கைக் குமரனே! - அம்பினையும்
ஒளியினையும்   உடைய   வளைந்த   வில்லினை  ஏந்திய சிவந்த
கரங்களையுடைய குமாரனே! குளிர் வெண் திங்கள் கால் நிறக்
கதிரின் கற்றை -
  குளிர்ந்த  வெள்ளைச்   சந்திரன்  உமிழ்கின்ற
வெள்ளை நிறக் கதிர்களின் தொகுதிகள்;தெற்றிய அனைய காட்சி
- இடை விட்டுவிட்டுப் பின்னியது போன்ற தோற்றம் கொண்ட;வால்
நிறத் தரளப் பந்தரர் நடுவண்  வைத்த  மரகதம்
- வெண்ணிற
முடைய  முத்துப்  பந்தலின்  நடுவே  வைக்கப்  பெற்றுள்ள மரகத
மணிகளின் தொகுதி; பால் நிறப் பரவை வைகும்- வெள்ளை நிறப்