பாற்கடலில் பள்ளி கொள்ளும்; பரமனை நிகர்ப்ப பாராய்- பரந்தாமனை ஒத்திருப்பதைப் பார்ப்பாயாக. |
கோல் - அம்பு. நிறம் - ஒளி. வெண்ணிறம் உடைய முத்துப் பந்தர். திருப்பாற் கடலுக்கும், பச்சை நிறம் உடைய மரகத மணியின் தொகுதி. பாற்கடலின் இடையுறங்கும் திருமாலுக்கும் உவமைகள் ஆயின. |
(17) |
6853. | 'கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே! |
| கொள்ள நோக்காய்-- |
| நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர், ஓர் |
| நாகர் பாவை, |
| காள வார் உறையின் வாங்கும் கண்ணடி, விசும்பில் |
| கவ்வி |
| வாள் அரா விழுங்கிக் காலும் மதியினை நிகர்த்த |
| வண்ணம். |
|
கோள் அவாவு அரிஏறு அன்ன குரிசிலே ! - தன்னை எதிர்ப்பாரைக் கைக்கொண்டு வெல்ல விரும்பும் ஆண்சிங்கம் போன்ற இலக்குவனே!நாள் அவாம் மின் தோய் மாடத்தும்பர் - விண்மீன்கள் ஒளியைப் பெற விரும்புமாறு மின்னுகின்ற மாடங்களின் உச்சியில்; ஓர் நாகர் பாவை - ஒரு நாக உலகத்து மங்கை; காளவார் உறையின் வாங்கும் கண்ணடி- கருமை நிறமுள்ள நீண்ட உறையிலிருந்து எடுக்கும் (வட்ட வடிவக்) கண்ணாடியானது; வாள் அரா விழுங்கிக் காலும் - ஒளியுடைய இராகு கேது என்னும் பாம்புகளால் விழுங்கி உமிழப் பெறும்; மதியினை நிகர்த்த வண்ணம் கொள்ள நோக்காய்! - சந்திரனை ஒத்து விளங்கும் தன்மையை நன்கு பார்ப்பாயாக. |
கோள்-கொள்ளுதல். முதல் நிலைத் தொழிற்பெயர். எதிர்க்கும் உயிர்களைத் தப்பாமல் கொல்லும் தன்மையால், சிங்க ஏற்றுக்கு இலக்குவன் உவமையானான். |
(18) |
6854. | 'கொற்ற வான் சிலைக் கை வீர ! கொடி மிடை |
| மாடக் குன்றை |
| உற்ற வான் கழுத்தவான ஒட்டகம், அவற்றது |
| உம்பர்ச் |
| செற்றிய மணிகள் ஈன்ற சுடரினைச் செக்காரத்தின் |
| கற்றை அம் தளிர்கள் என்னக் கவ்விய நிமிர்வ, |
| காணாய்! |