பக்கம் எண் :

512யுத்த காண்டம் 

கொற்றவான்  சிலைக்கை வீர ! - வெற்றியையே  ஏந்தும்
பெருமைக்குரிய   வில்   ஏந்தும்    கைகளையுடைய    வீரனே! 
கொடிமிடை மாடக் குன்றை உற்ற
- கொடிகள் நிறைந்த குன்றம்
போலும் மாடங்களை எட்டுகின்ற;வான் கழுத்த ஆன ஒட்டகம்-
உயர்ந்து நீண்ட  கழுத்துக்களையுடைய   ஒட்டகங்கள்; அவற்றது
உம்பர்
- அம்மாடங்களின்   மேல்;  செற்றிய  மணிகள் ஈன்ற
சுடரினை
- பதிக்கப்பெற்ற  மணிகள்   உமிழ்ந்த   ஒளிக்கதிரின்
கூட்டத்தை; செக்காரத்தின் கற்றை அம்தளிர்கள்  என்ன -
தேமா மரங்களின் கொத்துக்களான அழகிய தளிர்கள் எனக் கருதி;
கவ்விய  நிமிர்வ காணாய் - கவ்வுவதற்காக நிமிர்கின்றவற்றைக்
காண்பாயாக.
 

செக்காரம்-தேமாமரம். 
 

(19)
 

6855.

'வாகை வெஞ் சிலைக் கை வீர ! மலர்க் குழல்

புலர்த்த, மாலைத்

தோகையர் இட்ட தூமத்து அகிற் புகை முழுதும்  

சுற்ற,

 

வேக வெங் களிற்றின் வன் தோல் மெய்யுறப் 

போர்த்த தையல்--

 

பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையைப் 

பாராய்!

 

வாகை   வெஞ்சிலைக்கைவீர-  வெற்றியையே  ஏந்தும்
கொடிய   வில்லையேந்தும்   கைகட்குரிய   வீரனே!   மாலை
மலர்க்குழல் புலர்த்த
- மாலைப்பொழுதில் (தங்கள்) மலர் சூடிய
கூந்தல்களை உலர்த்துவதற்காக; தோகையர் இட்ட - பெண்கள்
மூட்டிய; தூமத்து  அகில் புகை  முழுதும் சுற்ற- நறும்புகை
வகையைச்    சார்ந்த    அகிலின்   புகை  முழுவதும் சூழ்ந்து
கொண்டதனால்; வேக  வெங்களிற்றின் - விரைந்து  செல்லும்
வன்மையுடைய மதயானையின்;வன்தோல் மெய்யுறப் போர்த்த-
வலியதோலினை மேனியில் நன்கு போர்த்துக் கொண்ட; தையல்
பாகனின்
-  உமையொரு  கூறனாகிய சிவபெருமானைப் போல;
பொலியத்  தோன்றும்  -   அழகுறத்   தோன்றுகிற;  பவள
மாளிகையைப் பாராய்!
- செம்பவழத்தாலான  மாளிகைகளைப்
பார்ப்பாயாக.
 

பவழ  மாளிகை  செம்மேனி அம்மானாகிய சிவபிரானையும்,
அம்மாளிகையைச்     சூழ்ந்திருந்த     அகிலின்   கரும்புகை,
அப்பெருமான்  போர்த்துள்ள  யானைத்தோல்  போர்வைக்கும்
உவமைகள் ஆயின.
 

(20)