பக்கம் எண் :

514யுத்த காண்டம் 

(அரக்கராற்)  சிறையிடப் பெற்றதனால்; அன்பின் துணைவரைப்
பிரிந்து   போந்து
-  அன்பிற்குரிய  தம்  கணவன்மார்களைப்
பிரிந்து வந்து; மருங்கு எனத் துவளும் உள்ளம்- இடை போல
வருந்தும்  மனத்தையும்;  பணம்  அயிர்ப்பு எய்தும் அல்குல்
பாவையர் 
-   பாம்பின்    படமோ    என்று    ஐயுறத்தக்க
நிதம்பத்தையுமுடைய   (தேவ)  மாதர்கள்; பருவம் நோக்கும் -
(தம்  வாட்டம்  போக்கும்)   கார்  காலத்தினை   (விருப்புடன்)
எதிர்நோக்கும்; கணமயில்  குழுவின்  - திரண்ட  மயில்களின்
கூட்டம் போல; நம்மைக்  காண்கின்றார் தம்மை நோக்காய்
- நம்மை  (விருப்பத்தோடு) எதிர்நோக்குகின்றார்கள்; அவர்களை
(நீயும்) காண்பாயாக.
 

மதர்த்தல்-களித்தல். 
 

(22)
 

6858.

'நாள்மலர்த் தெரியல் மார்ப! நம் பலம் காண்பான், 

மாடத்து

யாழ் மொழித் தெரிவைமாரும் மைந்தரும்  

ஏறுகின்றார்,

"வாழ்வு இனிச் சமைந்தது அன்றே" என்று மா  

நகரை எல்லாம்

பாழ்படுத்து இரியல் போவார் ஒக்கின்ற பரிசு  

பாராய்!'

 

நாள்  மலர்த்  தெரியல் வீர! - அன்றலர்ந்த மலர்களால்
ஆன மாலையணியும் மார்புடையானே! நம் பலம் காண்பான்
நமது  வலிமையைக்  காணும்   பொருட்டு;   யாழ்   மொழித் 
தெரிவைமாரும்   மைந்தரும்
- யாழ் போன்ற மொழி  பேசும்
(தேவ) மகளிரும்  ஆடவரும்; மாடத்து ஏறுகின்றார் வாழ்வு
இனிச் சமைந்தது அன்றே!
- மாடங்களில் ஏறுகின்றார் "நமக்கு
இனி      நல்வாழ்வு    அமைந்து    விட்டதன்றோ";   என்று
மாநகரையெல்லாம்
- எனக்கருதி, இலங்கை மாநகரை எல்லாம்;
பாழ்   படுத்து - பாழாகப் போட்டுவிட்டு;இரியல் போவார்
ஓடிப் போவாரை ஒக்கின்ற பரிசு பாராய்!-போன்ற தன்மையைக்
காண்பாயாக!
 

இலங்கையின் பணிகள் யாவும் தேவர்கள் புரிவதால், இவர்கள் 
வெளியேறின்   இலங்கை பாழ்படும் என்பார். "பாழ்படுத்து இரியல்
போவார்" என்றார். 

(23)