பக்கம் எண் :

 இலங்கை காண் படலம் 515

இராவணன் வானர சேனையைக் காணக் கோபுரம் ஏறுதல்
 

6859.

இன்னவாறு இலங்கைதன்னை இளையவற்கு 

இராமன் காட்டி,

சொன்னவா சொல்லாவண்ணம் அதிசயம் தோன்றும்  

காலை,

அன்ன மா நகரின் வேந்தன், அரிக் குலப் பெருமை 

காண்பான்,

சென்னி வான் தடவும் செம் பொற் கோபுரத்து 

உம்பர்ச் சேர்ந்தான்.
 

இன்னவாறு- இவ்விதமாக; இலங்கை தன்னை - இலங்கை
மாநகரத்தை;  இராமன்  இளையவற்குக் காட்டி - இராமபிரான்
இலக்குவனுக்குக் காண்பித்து; சொன்னவா சொல்லா வண்ணம்-
சொன்னவற்றைத்   திரும்பிச்   சொல்லாதவாறு   (புதிது  புதிதாக
இலங்கையில்)   அதிசயம்   தோன்றும்   காலை -விந்தைக்
காட்சிகளே தோன்றிக்  கொண்டிருக்கையில்; அன்ன  மாநகரின்
வேந்தன்
- அத்தகைய  பெருநகரின்   அரசனான   இராவணன்;
அரிக்குலப்   பெருமை  காண்பான் -  குரங்குக் கூட்டத்தின்
பெருமையினைக்  காண்பதற்காக;  சென்னி  வான்  தடவும்-
உச்சியானது விண்ணைத்  தொடுகின்ற; செம்பொன் கோபுரத்து
உம்பர்  சேர்ந்தான்
- செம்பொன்னாலாகிய  கோபுரம் ஒன்றின்
உச்சியை அடைந்தான்.  

(24)