பக்கம் எண் :

 இராவணன் வானரத் தானை காண் படலம் 517

6861.

பொலிந்ததாம் இனிது போர் எனலோடும்,

 

நலிந்த நங்கை எழிலால் வலி நாளும்

 

மெலிந்த தோள்கள் வடமேருவின் மேலும்

 

வலிந்து செல்ல, மிசை செல்லும் மனத்தான்.
 

நலிந்த   நங்கை  எழிலால் - (இராமன் பிரிவால்) வருந்தி
மெலிந்துள்ள  சீதையின்   அழகால்,  நாளும்  வலி  மெலிந்த
தோள்கள்
-  நாளுக்கு நாள்  வலிமை  தளர்ந்த,  (இராவணன்)
புயங்கள்;   போர்   எனலோடும்  -   போர்  (வந்து விட்டது)
என்றவுடனே; இனிது பொலிந்தது ஆம்- மகிழ்ச்சியால் மேலும்
உயர்ந்து விளங்கியன ஆயின; வடமேருவின் மேலும்- வடக்குத்
திசைக்கண்  உள்ள மேருமலையின் மேலும்; வலிந்து செல்ல -
வலியப் போர்க்குச்   செல்ல;  மிசை  செல்லும் மனத்தான் -
உந்துகின்ற உள்ளத்திண்மையுடையவன் ஆனான் அவன்.
 

பொலிதல்-முன்னிலும் மேம்பட்டு விளங்குதல். இராமனுக்காக
அந்நங்கை  மெலிந்தாள்;  அந்நங்கைக்காக  இவன்  மெலிந்தான்
என்பது ஒரு நயம். 
 

(2)
 

6862.

செம் பொன் மௌலி சிகரங்கள் தயங்க, 

அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக, 

வெம்பு காலினை விழுங்கிட, மேல்நாள், 

உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான். 

  

செம்பொன் மௌலி - செம்பொன்னால்  ஆன கலசங்கள்,
(அக்கோபுரத்தில்);   சிகரங்கள்   தயங்க  -  மேருமலையின்
சிகரங்களைப் போல் ஒளிர, அம்பொன் மேருவரை கோபுரம்
ஆக
- அழகிய    பொன்னாலான   மேருமலையாக   அந்தக்
கோபுரங்கள் விளங்க; வெம்பு காலினை - (தன்னோடு) சினந்த
அந்தக் காற்றுக் கடவுளை; விழுங்கிட - வெல்வதற்காக; மேல்
நாள்
- முன்பு ஒரு நாள்; உம்பர் மீதில் நிமிர் - (மேருவின்)
உச்சியின்  மீது   நிமிர்ந்து   (வளைத்துக்  கொண்ட); வாசுகி
ஒத்தான்
- வாசுகி   எனும்   பாம்பினைப்  போன்று நின்றான்
(இராவணன்.)
 

வாசுகியைப் பாம்பென்னும் ஒற்றுமை பற்றி, ஆதிசேடனாகவும்
கூறுவர். உபசார வழக்கு. கால்-காற்று. உம்பர் - மேல். 
 

(3)
 

6863.

தொக்க பூதம்அவை ஐந்தொடு துன்னிட்டு

ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும்,