பக்கம் எண் :

 இராவணன் வானரத் தானை காண் படலம் 519

உத்தரீகத்துக்கு அருவி  ஒப்பு. 'வேறுபல் துகிலின் நுடங்கி...
இழுமென  இழிதரும் அருவி."  (திருமுரு. 295-316)" அவிர்துகில்
புரையும் அவ்வெள் அருவி" (குறிஞ்சிப். 55) "ஓயா அருவித்திரள் 
உத்தரீயத்தை  ஒப்ப" (4780)   மலைக்கு  இராவணன்  மார்பும்.
அருவிக்கு அவன் மேலாடையும் ஒப்பாம்.
 

(5)
 

6865.

வானகத்தினில் உருப்பசி, வாசத்

தேன் அகத் திரு திலோத்தமை, செவ் வாய் 

 

மேனகைக் குல அரம்பையர், யாரும்

 

சானகிக்கு அழகு தந்து, அயல் சார,
 

வானகத்தினில்  உருப்பசி - வானகத்திற்குரிய ஊர்வசியும்;
வாசத்   தேன்  அகத்திரு   திலோத்தமை  - மணம் மிக்க
தேனுடைய தாமரை    மலரில்   வாழும்   திருமகள்   போன்ற
திலோத்தமையும்; செவ்வாய் மேனகை -  சிவந்த  வாயினளான
மேனகையும்; குல அரம்பையர் - குலத்திற் சிறந்த அரம்பையும்;
யாரும் - அவர் போன்ற தேவ மாதர் அனைவரும்; சானகிக்கு-
சீதாதேவிக்கு; அழகு  தந்து - (மேலும்)  அழகு தருவதற்காக;
அயல் சார- (இராவணன்) அருகே சார்ந்து நிற்கவும்.
 

தந்து - தர.  எச்சத்திரிபு.  இராவணனின்  புறத்தே   நின்ற
ஊர்வசி,   திலோத்தமை   முதலிய  தேவமாதர்கள் இராவணன்
அகத்தே  நின்ற   சீதா  தேவியின்   அழகை உயர்த்திக்காட்ட
உதவினர்  என்பது  கவிஞர்   குறிப்பு. "அரம்பையர்    குழாம்
புடைசுற்ற" எனக்  காட்சிப் படலத்தின்  பாடலை (5147)  இங்கு
நினைவு கூர்க. 
 

(6)
 

6866.

வீழியின் கனி இதழ், பணை மென் தோள்,

ஆழி வந்த அர மங்கையர், ஐஞ்ஞூற்று- 

ஏழ் இரண்டினின் இரண்டு பயின்றோர், 

சூழ் இரண்டு புடையும் முறை சுற்ற, 

 

வீழி இன் கனி இதழ் - வீழிக்கனியினைப்  போன்ற இனிய
இதழ்களையும்;  பணை  மென் தோள்-  மூங்கிலைப் போன்ற
தோள்களையும் உடையவராய்; ஆழி  வந்த  அரமங்கையர்-
பாற்கடல் கடையும்போது தோன்றிய தேவ மாதர்கள்; ஐஞ்ஞூற்று
ஏழ் இரண்டினில் இரண்டு
-  பதினாலாயிரவர்; பயின்றோர் -
(கலைகள் பல) பயின்றோர்;இரண்டு புடையும் சூழ் முறை சுற்ற
- (இராவணன்) இருமருங்கும் முறைப்படி சூழ்ந்து வர...