பக்கம் எண் :

520யுத்த காண்டம் 

கடல்  கடைகையில்  தேவமாதர்  பலர்  எழுந்தனர் என்பது
முன் (940)  கூறப்பட்டது. ஐஞ்ஞூற்று  ஏழ் இரண்டினில்  இரண்டு
500x7x2x2  =  14,000.  பயின்றோர் (எண்ணிக்கை) அமைந்தோர் 
எனினுமாம். வீழியின்கனி-சிவப்பு நிறமுடைய ஒருகனிவகை. 
 

(7)
 

6867.

முழை படிந்த பிறை முள் எயிறு, ஒள் வாள்

இழை படிந்த இள வெண் நிலவு ஈன, 

 

குழை படிந்தது ஒரு குன்றில், முழங்கா

மழை படிந்தனைய தொங்கல் வயங்க, 
 

முழை  படிந்த பிறை- குகையிற் படிந்துள்ள பிறை நிலாப்
போன்று;  முள் எயிறு(இராவணன்  உதடுகளின்  இருமருங்கும்)
கோரைப்பற்கள்; ஒள்வாள் - ஒள்ளிய ஒளியை; இழை படிந்த-
அணிகளில்   படிந்துள்ள;  இளவெண்  நிலவுஈன-  மெல்லிய
வெள்ளைக்கற்றைகளோடு வீசவும்; குழை படிந்தது ஒருகுன்றில்
-  குண்டலங்களை   அணிந்த    ஒரு   மலையிலே; முழங்கா
மழைபடிந்தனைய
  - முழங்குதல்  செய்யாத  மேகம்  படிந்தாற்
போன்று; தொங்கல் வயங்க- நீல மணி மாலைகள் (தோள்களில்)
ஒளி வீசவும்...
 

இராவணன் கோரைப் பற்கள் இதழ்களின் இருமருங்கும் மேல்
நோக்கி வளைந்து பிறை போன்று விளங்கின என்பதாம். குண்டலம் 
அணிந்த   மலை  -  இல்பொருள்  உவமை  மலை மேல் மேகம்
படிந்திருப்பது   போன்று,   இராவணன்   தோள்மேல்   நீலமணி
மாலைகள் கிடந்தன என்பதாம். 
 

(8)
 

6868.

ஓத நூல்கள் செவியின்வழி, உள்ளம்

 

சீதை சீதை என ஆர் உயிர் தேய,

நாத வீணை இசை நாரதனார் தம் 

வேத கீத அமுது அள்ளி விழுங்க, 

 

நாத   வீணை   இசை  நாரதனார் தம் - இனிய  நாதம்
எழுப்பவல்ல வீணையுடைய நாரதமாமுனிவர்  தம்முடைய; வேத
கீத  அமுது
-  சாம  வேதத்தின்  இசையெனும்  அமுதத்தை
(இசைக்க); அள்ளி விழுங்க- அள்ளி  அள்ளி  (செவிவாயால்)
விழுங்கியும்; நூல்கள் ஓத - (அறிஞர்கள்) (உயர்ந்த)  நூல்களை
ஓத(க்கேட்டும்); செவியின் வழி- (இவை யாவும்) உள்ளத்துள்ளே
நுழையாமல் செவி வழியாகவே (சென்று கொண்டிருக்க); உள்ளம்
சீதை சீதையென்று
- இராவணனது உள்ளமோ சீதை சீதை என்று