பக்கம் எண் :

 இராவணன் வானரத் தானை காண் படலம் 521

(ஓயாமல்)   செபித்துக்  கொண்டிருப்பதால்;  ஆருயிர் தேய-
அவனது உயிரோ (காம ஆசையால்) தேய்ந்து கொண்டிருக்கவும்...
 

"சீதை, சீதை" எனும்  அடுக்கு  இராவணன்  பிராட்டியிடம்
கொண்ட பேராசையின் தவிப்பினை உணர்த்தி நின்றது.
 

(9)
 

6869.

வெங் கரத்தர், அயில் வாளினர், வில்லோர்,

சங்கரற்கும் வலி சாய்வு இல் வலத்தோர், 

அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர், 

பொங்கு அரத்த விழியோர் புடை சூழ, 
 

வெங்கரத்தர்- கொடிய கரங்களை யுடையவர்களும்; அயில்
வாளினர்
  -  வேலும்  வாளும் ஏந்தியவர்களும்; வில்லோர்-
வில்லினைத்   தாங்கியவர்களும்;    சங்கரற்கும்  வலிசாய்வு
இல்வலத்தோர்
- சிவ பெருமானுக்கும்  (எதிர்த்தால்)  வலிமை
குன்றாத   பலமுள்ளவர்களும்;   அங்கு  அரக்கர் - (ஆகிய)
அரக்கர்கள்   அங்கே; சதகோடி அமைந்தோர் - நூறு கோடி
எண்ணிக்கை  யமைந்தவர்   (ஆயினர்);    பொங்கு   அரத்த
விழியோர்
  -  குருதி   பொங்குகிறது  என்னுமாறு,  சினத்தால்
சிவந்த விழியுடையோர்களுமாகிய அவ்வரக்கர் குழாம்; புடைசூழ
- (இராவணன்) இருமருங்கும் சூழ்ந்து நிற்கவும்...
 

(10)
 

6870.

கல்லில் அம் கை உலகம் கவர்கிற்போர்,

 

நல் இலங்கை முதலோர், நவை இல்லோர்,

சொல்லில் அங்கு ஓர் சதகோடி தொடர்ந்தோர், 

 

வில் இலங்கு படையோர், புடை விம்ம,
 

அம்கை - அழகிய கைகளால்; கல்லில்- அகழ்ந்தெடுப்பது
என்றால்;   உலகம்    கவர்கிற்போர்   -    உலகங்களையே
கவர்ந்தெடுக்க வல்லவரும்; நல் இலங்கை முதலோர்- அழகிய
இலங்கைக்கு முதற்குடி மக்களாய் தொன்று தொட்டு வாழ்பவரும்;
நவை   இல்லோர்  -   (தம் மன்னனுக்கு)  எந்தக்  குற்றமும்
புரியாதவரும்; சொல்லில் -  எண்ணிக்  கூறுமிடத்து; அங்கு
ஒர்சத  கோடி  தொடர்ந்தோர்
- அங்கே, ஒரு நூறு கோடியர்
எனத்  தொடர்பவரும்; வில்  இலங்கு  படையோர்  - வில்கள்
(தோளில்)   மின்ன   வருகிற) படை   வீரர்கள்; புடை விம்ம -
இருமருங்கும் புடை சூழவும்...