கல்லில் தோண்டினால்... இலங்கையிலுள்ள படையரக்கர்களின் பெருமை கூறியவாறு "ஒருவரே வல்லவர்; ஓர் உலகத்தினை வெல்ல" (9310) என்பர் மேலும். அரக்கர் உலகுக்குப் பெருங்குற்றங்கள் பல இழைப்பவர் ஆயினும், படைவீரர் என்ற முறையில், தம் தலைவனுக்கு எக்குற்றமும் இழையாமல் போர் புரிபவர் ஆதலின் "நவை இல்லார்" என்றார். நவை-குற்றம். |
(11) |
6871. | பார் இயங்குநர், விசும்பு படர்ந்தோர், |
| வார் இயங்கு மழையின் குரல் மானும் |
| பேரி, அங்கண் முருடு, ஆகுளி, பெட்கும் |
| தூரியம், கடலின் நின்று துவைப்ப, |
|
பார் இயங்குநர் - மண்ணில் இயங்குபவர்களும்; விசும்பு படர்ந்தோர்- வானில் சஞ்சரிப்பவர்களும் ஆகிய; வார் இயங்கு மழையின் குரல் மானும் - நீருடன் அரக்கர்கள் உலாவும் மேகத்தின் ஒலியைப் போன்று ஒலிக்கும்; பேரி, அங்கண் முருடு, ஆகுளி, பெட்கும்தூரியம் - பேரிகையும், அழகிய கண்களையுடைய முருடும், சிறு பறையும் ஆகிய யாவரும் விரும்பும் வாத்தியங்களை; கடலின் நின்று துவைப்ப - கடல் போன்று முழக்கவும்... |
வார - நீர். "வார் ஆயிர முகமா நகர் மஞ்ச" (வி.பா.அருச்.தவநிலை. 159) என்னுமிடத்து வார் நீர் எனும் பொருளில் வந்தது. பேரி - முரசு. ஆகுளி, முருடு - பழைய போர்க்கால இசைக்கருவிகள். |
(12) |
6872. | நஞ்சும் அஞ்சும் விழி நாகியர் நாண |
| வஞ்சி அஞ்சும் இடை மங்கையர், வானத்து |
| அம் சொல் இன் சுவை அரம்பையர், ஆடி, |
| பஞ்சமம் சிவணும் இன் இசை பாட, |
|
நஞ்சும் அஞ்சும் விழி - விடமும் அஞ்சவல்ல விழிகளையுடைய; நாகியர்- நாக உலக மங்கையர்களும்; நாண- வெட்கமுற்று; வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் - வஞ்சிக்கொடியும் அஞ்சவல்ல இடையினையுடைய (வித்தியாதரப்) பெண்டிரும்; இன்சுவை அஞ்சொல் வானத்து அரம்பையர்- இனிய சுவையோடு கூடிய அழகிய சொற்களை மொழியும் தேவமாதரும்; பஞ்சமம் சிவணும் இன்இசை - பஞ்சமப் பண் போன்ற இனிய இசையினை; ஆடிப் பாட - ஆடலோடு கூடப் பாடி இசைக்கவும்... |