நாகியர் - நாக உலகத்துப் பெண்கள். அரம்பையர் - வான் உலகத்து மகளிர். மூவுலகத்து அழகியரும் இராவணன் கால்களைச் சுற்றி ஆடிப்பாடிக் காலங் கழிக்கின்றனர் என்று அவன் ஆட்சியும் மாட்சியும் தெரிவித்தவாறு. ஞ்சமம் - எழுவகைப் பண்களில் ஒன்று. சிவணால்-ஒத்தல். |
(13) |
6873. | நஞ்சு கக்கி எரி கண்ணினர், நாமக் |
| கஞ்சுகத்தர், கதை பற்றிய கையர், |
| மஞ்சு உகக் குமுறு சொல்லினர், வல் வாய்க் |
| கிஞ்சுகத்த கிரி ஒத்தனர், சுற்ற, |
|
நஞ்சு கக்கி எரிகண்ணினர் - விடம் உமிழ்ந்து, எரிகின்ற கண்களையுடையவரும்; கதை பற்றிய கையர்- கதாயுதத்தைப் பற்றியுள்ள கரங்களையுடையவரும்; மஞ்சு உகக் குமுறு சொல்லினர்- மேகமும் அஞ்சி வீழும்படியான குமுறி ஒலிக்கும் சொற்களையுடையவரும்; கிஞ்சுகத்த வல்வாய்- முருக்க மலர் போன்ற பெரிய சிவந்த வாய்களையுடைய; கிரி ஒத்தனர் - மலைகளை ஒத்தவரும் ஆகிய; நாமக் கஞ்சுகத்தர் - அச்சந்தரும் சட்டையணிந்த மெய்க்காவலர்கள்; சுற்ற- சுற்றிக் கொண்டே இருக்கவும்... |
கஞ்சுகம் - சட்டை., கதை - தண்டு. கிஞ்சுகம்-முருக்கமலர்.. ஊன் உண்பவர் ஆகிய அரக்கருக்கு குருதி தோய்ந்த வண்ணம் உள்ள உதடுகள் உடைமை பற்றி, "வல்வாய்க் கிஞ்சுகத்த" என்றார். சிவந்த வாயையுடைய மலைபோன்றவர் -இல் பொருள் உவமை. நாமம்-அச்சம். |
(14) |
6874. | கூய் உரைப்ப குல மால் வரையேனும், |
| சாய் உரைப்ப அரியவாய தடந் தோள்- |
| வாய் உரைத்த கலவைக் களி வாசம், |
| வேய் உரைப்பது என, வந்து விளம்ப, |
|
கூய் உரைப்ப- (யாவருக்கும்) தெரியுமாறு உவமை கூறுவதற்கு உரிய; குலமால் வரையேனும் - எட்டுத்திக்கிலும் உள்ள பெரிய மலைகளாயினும்; சாய் உரைப்ப அரிய ஆய தடந்தோள்வாய்- உவமை கூறுவதற்கு இயலாதனவான அகன்ற (இராவணன்) தோள்களில்; உரைத்த கலவைக்களி வாசம் -பூசப் பெற்றுள்ள கலவைச் சாந்துகளின் நறுமணம்; வேய் உரைப்பது என - (இராவணன் வருகின்றான் என) ஒற்றர்கள் வந்து உரைப்பதைப் போன்று; வந்து விளம்ப -காற்றில் கலந்து வந்து உரைக்கவும்... |