பக்கம் எண் :

524யுத்த காண்டம் 

கூய்-கூவி. எல்லோர்க்கும் தெரியுமாறு உரைத்தல்.
கூவியுரைத்தலாம். சாய்-சாயல்; உவமை. யானையின் வருகையை
மணி ஒலி உரைப்பது போல் இராவணன் வருகையை நறுமணம் தூதாக
வந்து உரைக்கும் என அழகுற மொழிந்தார். வேய்-தூது;
ஒற்றுமாம். 
 

(15)
 

6875.

வேத்திரத்தர், எரி வீசி விழிக்கும்

 

நேத்திரத்தர், இறை நின்றுழி நில்லாக்

 

காத்திரத்தர், மனை காவல் விரும்பும்

 

சூத்திரத்தர், பதினாயிரர் சுற்ற,
 

வேத்திரத்தர் - (கைகளிற்) பிரம்பினை ஏந்தியவரும்;
எரிவீசி விழிக்கும் நேத்திரத்தர் - தீயுமிழுமாறு
பார்க்கும் கண்களையுடையவரும்; இறை நின்றுழி நில்லாக்
காத்திரத்தர்
- சிறிது நேரம்கூட நின்ற இடத்திலேயே
நில்லாமல் (உலவிக் கொண்டேயிருக்கும்)
உடம்பினையுடையவரும்; மனை காவல் விரும்பும் சூத்திரத்தர்-
அரண்மனைக் காவலுக்கு விரும்பியேற்க வல்ல உபாயங்கள்
அறிந்தவரும்; பதினாயிரர் சுற்ற- பத்தாயிரம் பேர்
சுற்றிக் காவல் புரியவும்...
 

வேத்திரம்-பிரம்பு. காத்திரம்-உடல். அரண்மனை
வாயிற்காவலர்கள் நின்ற இடத்து நில்லாமல் நடந்த வண்ணம்
பணிபுரிபவர் ஆதலின், "இறை நின்றுழி நில்லாக்
காத்திரத்தர்" என்றார். இறை-சிறிது சூத்திரம்-உபாயம்,
நுட்பம். 
 

(16)
 

இராவணன், இராமனைக் காணுதல்
 

6876.

தோரணத்த மணி வாயில்மிசை, சூல்

 

நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான், 

 

ஆரணத்தை, அரியை, மறை தேடும்

 

காரணத்தை, நிமிர் கண் கொடு கண்டான்.
 

தோரணத்த மணிவாயில் மிசை- தோரணங்களோடு மணிகள்
பதித்துள்ள கோட்டை வாயில் கோபுரத்தின் மேல்; சூல்
நீர் அணைத்த முகில் ஆம் என
-கருவாக நீரினை
உட்கொண்டுள்ள கருமேகம் என்னுமாறு; நின்றான் -
நின்றவனாகிய இராவணன்; ஆரணத்தை- நான் மறைகளின் வடிவு
கொண்டவனை; அரியை- (அம்மறைகளின் நாயகனான) திருமாலை;
மறை தேடும் காரணத்தை - அம்மறைகள் முழுதும் அறிய இன்னும்
தேடிக் கொண்டிருக்கும் காரணப்பொருளை