அழகாலே அன்பரைக் கூட்டும்; மேனி அழகாலே பகைவரை வாட்டும்" என்பதாம். |
(20) |
6880. | 'இங்கு இவன், "படை இலங்கையர் மன்னன் |
| தங்கை" என்றலும், முதிர்ந்த சலத்தால், |
| அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும் |
| கொங்கை, நாசி, செவி, கொய்து குறைத்தான். |
|
இங்கு இவன் - (சாரன் இலக்குவனைச் சுட்டிக்காட்டி) இதோ காணும் இவன்; "படை இலங்கையர் மன்னன் தங்கை" என்றலும் - 'படை வலிமை மிக்க இலங்கையர் வேந்தன் இராவணன் தங்கை என்று கேட்டவுடனே; முதிர்ந்த சலத்தால் - முற்றிய கோபத்தால்; அங்கை வாள் கொடு - அழகிய கையில் வாளை ஏந்தி; அவள் ஆகம் விளங்கும் கொங்கை- உன் தங்கை சூர்ப்பனகையின் மார்பில் விளங்கிய தனங்களையும்; நாசி, செவி கொய்து குறைத்தான் - மூக்குடன் காதுகளையும் வெட்டி வீழ்த்திய இலக்குவன் ஆவான் (என்றான்). |
சலம்-தணியாச் சினம், ஆறாக்கோபம். |
(21) |
6881. | 'அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி, |
| நிறக் கருங் கடலுண் நேமியின் நின்று, |
| துறக்கம் எய்தியவரும் துறவாத |
| உறக்கம் என்பதனை ஓட முனிந்தான். |
|
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி - (இந்த இலக்குவன்) தரும நெறியை நோக்குவதல்லாமல் வேறொரு நெறியை நோக்காதவன் ஆகி; நிறக் கருங்கடல் உண்- நிறத்தால் கருமையுடைய கடலைத் தன்னுள் கொண்ட; நேமியின் நின்று - சக்கரவாள மலைபோல் அமைந்து; துறக்கம் எய்தியவரும் - சொர்க்கத்தைச் சென்றடைந்தவர்களும்; துறவாத உறக்கம் என்பதனை - நீக்க இயலாத நித்திரை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதனை; ஓட முனிந்தான்- வெருண்டோடுமாறு சினந்தவன் ஆவான். |
கடலுக்குக் காவலாக அமைந்து அதனைச் சூழ்ந்துள்ளது சக்கரவாள மலை. அதுபோல், இராமனைக் காத்து அவனுக்குரிய சூழலாக அமைந்தவன் இலக்குவன். அறக்கண்-அறமே கண்ணாகக் கொள்ளல். கண் ஆகு பெயராக நெறியைக் குறித்தது. இச்செய்யுளில் |