பக்கம் எண் :

 இராவணன் வானரத் தானை காண் படலம் 533

அமிசத்தால் சிவனும்  அறிவால்  பிரமனும்   ஆதலின் "சிவன்
காண்;   அயன்    காண்" எனப்பட்டான். ஒப்பு,  "விரிஞ்சனோ
விடை  வலானோ" (3768)  "காலனை   ஒக்கும்தூதன்   காலும்
கண்ணுதலும்   என்பார். " (6821); " புராரிமற்று    யானே வாத
சேயெனப் புகன்றான்" (206) "ஆதி அயன்  தானேயென யாதும்
அறைதின் நீர்!" (4725)   என்று  பல   இடங்களில் இச்செய்தி
குறித்தமை காண்க. 
 

(30)
 

6890.

'முரபன், நகு தோளவன், மூரி மடங்கல் என்னக்

கர பல் நகம் அன்னவை மின் உகக்  

காந்துகின்றான்;

வர பல் நகம்தன்னையும் வேரொடு வேண்டின் 

வாங்கும் 

சரபன் அவன்; சதவலி ஆய தக்கோன். 
 

நகுகோளவன் - ஒளிர்கின்ற தோளினையுடையவனாய்; மூரி
மடங்கல் என்ன
- வலிய நரசிங்கம் என்று கூறும்படியாக; கரம்,
பல்,   நகம்   அன்னவை
- கைகளும், பற்களும், நகங்களும்
ஆகியவை; மின்  உகக் காந்துகின்றான் - மின்னல் போன்று
ஒளி   சிந்துமாறு   விளங்குகின்ற அவன்தான்; முரபன்- முரபன்
என்னும்  பெயருடையவன்;  வரபல் நகம் தன்னையும்- சிறந்த
பல   மலைகளையும்;   வேண்டின்    வேரொடு  வாங்கும்-
விரும்பினால் வேரொடு பெயர்க்கவல்ல ஆற்றலையுடைய; அவன்
சரபன்
-  அவன்தான்   சரபன்    என்பவன்;   இவன்- இதோ
இங்கிருப்பவன்;  சதவலி   ஆய  தக்கோன் -  சதவலி எனும்
பெயருடைய பெரியோன்.
  

மூரி-வலிமை-மடங்கல். திரிபு அணி. 
 

(31)
 

6891.

'மூன்று கண் இலன் ஆயினும், மூன்று எயில்

எரித்தோன்

 

போன்று நின்றவன் பனசன்; இப் போர்க்கு எலாம்

தானே

ஏன்று நின்றவன் இடபன்; மற்று இவன்தனக்கு

எதிரே

தோன்றுகின்றவன் சுடேணன், மூதறிவொடு

தொடர்ந்தோன்.

 

மூன்று  கண் இலன் ஆயினும்- மூன்று கண்களையுடையவன்
அல்லன் ஆயினும்; மூன்று எயில் எரித்தோன் - முப்புரம் எரித்த