பக்கம் எண் :

 இராவணன் வானரத் தானை காண் படலம் 535

"மேதினியை முதுகு நொய்தெனச் செய்தவன்" என்று ததிமுகன்
பெருமை சாற்றினார். 
 

(33)
 

6893.

'அண்ணல் ! கேள்: இதற்கு அவதியும் அளவும் 

ஒன்று உளதோ?

விண்ணின் மீனினைக் குணிப்பினும், வேலையுள்  

மீனை

எண்ணி நோக்கினும், இக் கடல் மணலினை 

எல்லாம் 

கண்ணி நோக்கினும், கணக்கு இலது' என்றனன், 

காட்டி.
 

அண்ணல்! - பெருமைக்குரியோனே! கேள்-  கேட்பாயாக
(என்று); காட்டி -  (அவ்வானரச் சேனையினைக்) காண்பித்து;
இவர்க்கு - இந்த வானர  வீரர்கட்கு;  உவமையும் அளவும்-
ஒப்பும்    எண்ணிக்கையும்;    ஒன்று   உளதோ?- ஏதேனும்
உண்டோ?  விண்ணின்  மீனினைக் குணிப்பினும்- வானத்து
மீன்களை   எண்ணினாலும்;   வேலையுள்  மீனை  எண்ணி
நோக்கினும்
- கடலில் உள்ள மீன்களை எண்ணிப் பார்த்தாலும்;
இக்கடல் மணலினை எல்லாம் கண்ணி நோக்கினும்
- இந்தக்
கடலில்  உள்ள மணலை எல்லாம் கருதிப் பார்த்தாலும்; கணக்கு
இ(ல்)லை
- கணக்கிட இயலாது என்றனன்.
  

சேனையினை    எண்ண   இயலாது என்பதற்கு   வானத்து
மீன்களையும்,  கடல்   மீன்களையும் ஆழி மணலையும் எண்ண
இயலாதது போல் என மூன்று உவமைகள் காட்டினார். 
 

(34)
 

இராவணன் வானரப் படையை இகழ்தல்
 

6894.

சினம் கொள் திண் திறல் அரக்கனும், சிறு நகை

செய்தான்,

'புனம் கொள் புன் தலைக் குரங்கினைப் புகழுதி  

போலாம்;

வனங்களும் படர் வரைதொறும் திரிதரு மானின் 

இனங்களும் பல என் செயும்; அரியினை?'  

என்றான்.