பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 539

புறப்பட; சுருதியன்னவன் - வேதமே போன்றவனும்; சிவந்த
நல்கனி   என்று   சொல்ல
-  உனக்கு   உணவு  சிவந்த
நல்லகனிகள்   என்றுதாய்    சொல்ல;  பருதிமேல்  பண்டு
பாய்ந்தவன் ஆம்
- சூரியனைக் கனியென்று முன்பு சூரியன்
மேல்   பாய்ந்தவனும்  ஆகிய;    எனப்    பாய்ந்தான் -
அநுமனைப் போல் (இராவணனை நோக்கிப்) பாய்ந்தான்.
 

சுக்கிரீவன் உடலினும் மனம் முந்த மனத்திலும் மனத்துள்
எழுந்த    சினம்    முந்த, சினத்திலும் அதனால்    எழுந்த
தீப்பொறிகள் முந்தி இராவணனைத் தாக்கச் சென்றன  என்று
கூறியுள்ள கற்பனைத் திறன் சுவைக்கத் தக்கது. 
 

(3)
 

6898.

சுதையத்து ஓங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து, 

சிதையத் திண் திறல் இராவணக் குன்றிடைச் 

சென்றான், 

ததையச் செங் கரம் பரப்பிய தன் பெருந் தாதை 

உதையக் குன்றின்நின்று உகு குன்றில் பாய்ந்தவன்  

ஒத்தான்.

 

சுதையத்து   ஓங்கிய  - வானத்து மீன் மண்டலம் வரை
உயர்ந்தோங்கியுள்ள;   சுவேலத்தின்   உச்சியைத் துறந்து-
சுவேல மலையின் உச்சியை விட்டு; திண்திறல் சிதைய- பேர்
ஆற்றல்   எல்லாம்   சிதையுமாறு;  இராவணக் குன்றிடைச்
சென்றான்
-  இராவணன்   என்னும்   மலைமேல்  பாய்ந்த
சுக்கிரீவன்;     செங்கரம்       ததையப்பரப்பிய - தன்
செந்நிறக்கிரணங்களை,   அடர்த்தியாகப்  பரவச் செய்த; தன்
பெருந்தாதை
- தன்னுடைய பெருமைக்கு உரிய தந்தையாகிய
சூரியன்; உதயக் குன்றின் நின்று- தான் உதிக்கும்  உதயகிரி
எனும் மலையிலிருந்து; உகுகுன்றில் பாய்ந்தவன்  ஒத்தான்
-தான் மறையும் அத்தமனகிரிக்குப் பாய்ந்தானைப் போன்றவன்
ஆனான்.
  

ஒரு  மலை மேலிருந்து இன்னொரு மலைமேல் குதித்தான்
என்பது ஒரு நயம். 
 

(4)
 

6899.

பள்ளம் போய்ப் புகும் புனல் எனப் படியிடைப் படிந்து

தள்ளும் பொற் கிரி சலிப்புறக் கோபுரம் சார்ந்தான்,