| வெள்ளம்போல் கண்ணி அழுதலும், இராவணன்மேல் |
| தன் |
| உள்ளம்போல் செலும் கழுகினுக்கு அரசனும் |
| ஒத்தான்.* |
|
பள்ளம் போய்ப் புகும் புனல் என- பள்ளமான இடத்திற்குப் பாய்ந்தோடும் நீரே போல; படியிடைப் படிந்து தள்ளும் பொற்கிரி - பூமியிலே சாயுமாறு சாய்த்துத் தள்ளப்பட்ட திரிகூட மலையும்; சலிப்புறக் கோபுரம் சார்ந்தான்- சலிப்படையுமாறு இராவணனிருந்த கோபுரத்தைச் சார்ந்தவனான சுக்கிரீவன்; வெள்ளம் போற் கண்ணி அழுதலும் - வெள்ளம் போலக் கண்ணீர் பெருக்கும் கண்களையுடைய சீதை (விம்மி) அழுதவுடன்; உள்ளம் போல் - தன் மனம் சென்ற வேகத்திலேயே; இராவணன் மேல் செலும் - இராவணன் மேல் பாய்ந்து சென்ற; கழுகினுக்கு அரசனும் ஒத்தான் - கழுகின் வேந்தனாகிய சடாயுவையும் ஒத்தவன் ஆனான். |
சுக்கிரீவன் இராவணன் மேல் பாய்ந்த வேகத்திற்குப் பள்ளம் பாயும் வெள்ளத்தை உவமையாக்கினார். மேருவுக்கும் வாயுவுக்கும் நிகழ்ந்த பலப் போட்டியில் வந்து வீழ்ந்த மேருவின் ஒரு துண்டாதலின் திரிகூடமலை "தள்ளும் பொற்கிரி" எனப்பட்டது. |
(5) |
6900. | கரிய கொண்டலை, கருணை அம் கடலினை, |
| காணப் |
| பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர், |
| பிறரும், |
| உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும், உலைவுற்று |
| இரியல்போயின மயிற் பெருங் குலம் என இரிந்தார். |
|
கரிய கொண்டலை - கருமை நிறம் கொண்ட முகில் போன்றவனும்; அம் கருணை கடலினை- அழகிய கருணையின் கடல் போன்றவனுமான இராமபிரானை; காண- (கண்ணாரக்) கண்டு மகிழ்வதற்காக; பெரிய கண்கள் பெற்று - பெரிய அளவினையுடைய கண்களைப் (பேறாகப்) பெற்று; உவக்கின்ற அரம்பையர் பிறரும்- மகிழ்வில் திளைக்கின்ற வானமாதர்களும் பிற மாதர்களும்; உரியகுன்றிடை - தமக்குரிய மலையின் மீது; உரும் இடி வீழ்தலும் - அச்சம் தரத்தக்க இடி வீழ்ந்தவுடன்; உலைவுற்று - மனம் நடுங்கி; இரியல் போயின- (திசைக்கொன்றாக) |