பக்கம் எண் :

542யுத்த காண்டம் 

இத்திசையின்   வந்த  பொருள் - நான்   உள்ள திசை
நோக்கி வந்த காரியம்; என் என - என்ன என்று (இராவணன்)
கேட்க; இயம்பான் - (வாயால்) விடையொன்றும் கூறாதவனாய்;
தத்தி எதிர் சென்று
- தாவி, (இராவணனுக்கு) நேராகப் போய்;
திசைவென்று   உயர்   தடந்தோள்
- எண் திசைகளையும்
வென்று  (பெருமிதத்தால்)   உயர்ந்த   அகன்ற    தோள்கள்;
பத்தினொடு   பத்துடையவன்
-  இருபதை  யுடையவனான
இராவணனுடைய; உடல் பதைப்ப- உடல் நடுங்குமாறு; நிமிர்
கைத்துணை  குளிப்ப
-  உயர்த்திய தன் இருகைகளும் நன்கு
பதியுமாறு;   உரத்தில்   குத்தினன்  -  மார்பில் குத்தினான்
(சுக்கிரீவன்).
 

(8)
 

6903.

திருகிய சினத்தொடு செறுத்து எரி விழித்தான், 

ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப, 

 

தரு வனம் எனப் புடை தழைத்து உயர் தடக் கை

இருபதும் எடுத்து, உரும் இடித்தென அடித்தான். 
 

திருகிய      சினத்தொடு    - (அப்போது இராவணன்)
நேர்மையற்ற கோபத்தோடும்; செறுத்து எரிவிழித்தான்- பகை
உணர்வோடும்  தீப்பொறி  சிந்தும்   விழியோடு    பார்த்தான்;
தருவனம் என புடை தழைத்து
- மரங்கள் அடர்ந்த காடுகள்
போல பக்கமெல்லாம்   தழைத்து  விழித்து; உயர் தடக்கை-
உயர்ந்து  அகன்ற   கைகள்; இருபதும் எடுத்து- இருபதையும்
தூக்கி; உரும்  இடித்தென ஒலித்த  ஒலி   ஒப்ப  -  இடி
இடித்ததாக பத்துத்திசைகளிலும் எதிரொலித்த ஒலியினைப்போல;
அடித்தான் - (பேரொலி எழ) சுக்கிரீவனைத் தாக்கினான்.
 

மரம் செழித்துக்   கிடக்கும் வனம் போல, கரம் செழித்துக்
கிடக்கும்   உடல்  ஆதலின், "தருவனம் எனப் புடை தழைத்து
உயர்  தடக்கை" என்றார். இதுமுதல் ஆறுகவிதைகள் அந்தாதித்
தொடையில் அமைந்துள்ள அழகு காண்க.
 

(9)
 

6904.

அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம்

பொடித்து எழ, உறுக்கி எதிர் புக்கு, உடல் பொருந்தி, 

கடுத்த விசையின் கடிது எழுந்து, கதிர் வேலான் 

முடித் தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான். 

  

அடித்த விரல் பட்ட உடலத்து உழி - இராவணன் அடித்த
விரல் பட்ட (சுக்கிரீவன்) உடம்பிலிருந்து; இரத்தம் பொடித்து எழ