- இரத்தம் துளிதுளியாய்ப் பொங்க; உறுக்கி எதிர்புக்கு - சினம் பொங்கி, இராவணன் முன்னே சென்று; உடல் பொருந்தி - (அவனுடன் தன்) உடலைப் பூட்டி; கடுத்த விசையில் - மிக்க வேகத்துடன்; கடிது எழும்பி - விரைந்து மேல் எழுந்து; கதிர் வேலான் - ஒளி மிகு வேல் ஏந்திய இராவணனுடைய; முடித்தலைகள் பத்தினும் - மகுடம் அணிந்த தலைகள் பத்தின் மேலும்; முகத்தினும் - முகத்தின் மேலும்; உதைத்தான் - (சுக்கிரீவன்) உதைத்தான். |
முகத்திலும் தலையிலும் உதை விழல்-செய்தவன் உயர்வையும், செய்யப்பட்டவன் இழிவையும் உணர்த்தும் இப்பாடலில் மற்போர் முறை சுட்டப்பட்டுள்ளது. |
(10) |
6905. | உதைத்தவன் அடித் துணை பிடித்து, ஒரு கணத்தில், |
| பதைத்து உலைவுறப் பல திறத்து இகல் பரப்பி, |
| மதக் கரியை உற்று அரி நெரித்தென மயக்கி, |
| சுதைத் தலனிடை, கடிது அடிக்கொடு துகைத்தான். |
|
உதைத்தவன் அடித்துணை பிடித்து - தன்னை உதைத்தவனான (சுக்கிரீவனின்) கால்கள் இரண்டினையும் பற்றி; ஒரு கணத்தில்- ஒரு விநாடிப் பொழுதில்; பதைத்து உலைவுற- (சுக்கிரீவன்) துடிதுடித்து வருந்துமாறு; பல திறத்து இகல் பரப்பி - பல்வேறு வகைப்பட்ட (தன்) மற்போரின் வலிமைகளை வெளிப்படுத்தி; அரி மதகரியை உற்று நெரித்து என - சிங்கம் மதயானையை நெருங்கி நெருக்கினாற் போல; மயக்கி - மூர்ச்சையடையச் செய்து; சுதைத் தலனிடை- சுண்ணாம்பு தீற்றிய தரை நிலத்தில் இட்டு; கடிது அடிக்கொடு - விரைவாகக் கால் கொண்டு; துகைத்தான்- தேய்த்தான் (இராவணன்). |
சுதைத்தலன்-சுண்ணாம்பு தீற்றிய தரை. துகைத்தல்-கால்களால் தேய்த்து உழக்குதல். மதயானையைச் சிங்கம் வதக்குவது போல், இராவணன் சுக்கிரீவனைத் துன்புறுத்தித் தேய்த்தான் என்பதால் இது உவமையணி. |
(11) |
6906. | துகைத்தவன் உடற் பொறை சுறுக்கொள இறுக்கி, |
| தகைப் பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி, |
| வகைப் பிறை நிறத்து எயிறுடைப் பொறி வழக்கின். |
| குகைப் பொழி புதுக் குருதி கைக்கொடு குடித்தான். |