| "அம்புக்கு முன்னம் சென்று, உன் அரும் பகை |
| முடிப்பல்" என்று |
| வெம்புற்ற மனமும், யானும், தீது இன்றி, மீள |
| வந்தேன். |
|
செம்புக்கும் சிவந்த - செம்பு எனும் உலோகத்தைக் காட்டிலும்; செங்கண் திசை நிலைக் களிற்றின் - சிவந்த கண்களையுடைய திக்குயானைகளின்; சீற்றக் கொம்புக்கும் - சினத்தோடு பாய்ந்த கொம்புகளுக்கும்; என்னுடைய புன்குரங்குத்தோள்- என்னுடைய புல்லிய குரங்குத் தோள்கள்: குறைந்த அன்றே- வலி குறைந்து போயின அல்லவோ? அம்புக்கு முன்னம் சென்று - (உன்னுடைய) அம்புக்கு முன்னாகவே சென்று: உன் அரும் பகை முடிப்பல் என்று- உனது அரிய பகையை முடிப்பேன் என்று (கூறி); வெம்புற்ற மனமும் யானும்- புழுங்கிய உள்ளமும் நானுமாய்: தீங்கின்றி மீள வந்தேன் - எந்த வித இடையூறு மின்றி பத்திரமாக மீண்டு வந்து விட்டேன் (அல்லவோ?) |
(41) |
6936. | "நூல் வலி காட்டும் சிந்தை நும் பெருந் தூதன், |
| வெம் போர |
| வேல் வலி காட்டுவார்க்கும், வில் வலி |
| காட்டுவார்க்கும், |
| வால் வலி காட்டிப் போந்த வள நகர் புக்கு, மற்று |
| என் |
| கால் வலி காட்டிப் போந்தேன்; கை வலிக்கு அவதி |
| உண்டோ? |
|
நூல் வலி காட்டும் சிந்தை- (கற்ற) நூல்களின் வலிமையைத் (தன் சொல் வலிமையால் காட்ட வல்ல) மனமுடைய: நும் பெருந்தூதன் - உம்முடைய பெருமைக்குரிய தூதுவனாகிய அனுமன்: வெம்போரில் - (தான் அரக்கருடன் நடத்திய) கொடிய போரில், (தன்னிடம்) வேல் வலி காட்டுவார்க்கும் - தங்கள் வேலின் வலிமையைக் காட்ட வந்தவர்க்கும்: வில் வலி காட்டுவார்க்கும் - வில்லின் வலிமையைக் காட்ட வந்தவர்க்கும்: வால் வலி காட்டிப் போந்த வள நகர் - (மாறாகத் தன்) வாலின் வலிமையைக் காட்டித் திரும்பிய வளம் மிக்க நகராகிய இலங்கையில் புகுந்து: என் கால் வலி காட்டிப் போந்தேன்- (திரும்பி வருவதில்) என்னுடைய கால் |