பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 563

வலிமையைக் காண்பித்து  வந்தேன்:  கை   வலிக்கு அவதி
உண்டோ?
- என் கை வலிமைக்கு எல்லையும் உளதோ?
 

(42)
 

வீடணன் சுக்கிரீவனது வீரத்தைப் பாராட்டுதல்
 

6937.

இன்னன பலவும் பன்னி, இறைஞ்சிய முடியன்

நாணி,

மன்னவர்மன்னன் முன்னர், வானர மன்னன் நிற்ப,

அன்னவன்தன்னை நோக்கி, அழகனை நோக்கி,

ஆழி

மின் என விளங்கும் பைம் பூண் வீடணன்

விளம்பலுற்றான்:

 

இன்னன   பலவும் பன்னி- இவ்வாறு பல வாசகங்களைச்
சொல்லி;இறைஞ்சிய முடியன் நாணி- வணங்கிய தலையினனாய்
வெட்கமுற்று;   மன்னவர்   மன்னன்   முன்னர் - அரசர்க்கு
அரசனான   இராமபிரான்  முன்பு:   வானர  மன்னன் நிற்ப-
வானரங்கட்கு  அரசனான சுக்கிரீவன்  நிற்கும்போது: அன்னவன்
தன்னை நோக்கி
- அந்தச்  சுக்கிரீவனைப் பார்த்து: அழகனை
நோக்கி
- இராமபிரானைப் பார்த்து: ஆழி மின் என விளங்கும்
பைம்பூண்
- கடலில் தோன்றிடும் மின்னலைப்  போல் ஒளிவிடும்
ஆபரணங்களையணிந்த:     வீடணன்  மொழிவது ஆனான் -
வீடணன் மொழியத் தொடங்கினான்.
 

இட்சுவாகு     குலத்திற்கு     உலக   அரசுகள்   எல்லாம்
கட்டுப்பட்டது   என்னும்  மரபு  பற்றி "மன்னவர் மன்னன்"  என
இராமபிரானைச் சுட்டினார்.
 

(43)
 

6938.

'வாங்கிய மணிகள், அன்னான் தலைமிசை மௌலி

மேலே

ஓங்கிய அல்லவோ? மற்று, இனி அப்பால் உயர்ந்தது

உண்டோ?

தீங்கினன் சிரத்தின் மேலும், உயிரினும், சீரிது

அம்மா!

வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி

விட்டாய்!