| முடி மணி பறித்திட்டாயோ? இவன் இனி முடிக்கும் |
| வென்றிக்கு |
| அடி மணி இட்டாய் அன்றே?--அரிக் குலத்து |
| அரச!' என்றான். |
|
அரிக்குலத்து அரச! - குரங்கினத்தின் தலைவனே! தொடிமணி இமைக்கும் தோளாய்! - தோள்வளையில் பதித்துள்ள மணிகள் ஒளிரும் தோள்களையுடையவனே! வடிமணி வயிரத்து ஒள்வாள் -தேர்ந்த மணிகளும் வயிரமும் பதிக்கப் பெற்ற 'சந்திரகாசம்' என்னும் வாளினை: சிவன் வயின் வாங்கிக் கொண்டான்- சிவபிரானிடமிருந்து பெற்றுக் கொண்டவனான இராவணனுடைய: முடிமணி பறித்திட்டாயோ? - மகுடத்தில் இருந்த மணிகளையா கைப்பற்றினாய் நீ?: இவன்- (இல்லை. இல்லை) இந்த இராமபிரான்: இனி முடிக்கும் வெற்றிக்கு- இனி அடைய இருக்கும் வெற்றி மாளிகைக்கு; அடி மணி இட்டாய`் - அடித்தளத்தில் இடும் மணியை யன்றோ இட்டாய்! சொல் இதின் வேறும் உண்டோ?- புகழ் விளைக்கும் செயல் இதை விடவும் வேறு எதுவும் உண்டோ? (இல்லையென்க); என்றான்- |
சிவனிடம் இராவணன் வரத்தால் பெற்ற வாள் "சந்திரகாசம்" முடிமணியைப் பறித்திட வில்லை' இராமன் வெற்றி மாளிகைக்கு அடித்தள மணியிட்டாய் என ஒன்றைச் சமத்காரமாக மறுத்து இன்னொன்றாகக் கூறுவதால் இது அவநுதியணி. |
(47) |
இராமன், சுக்கிரீவன் வெற்றியைப் போற்றுதல் |
6942. | 'வென்றி அன்று என்றும், வென்றி வீரர்க்கு |
| விளம்பத்தக்க |
| நன்றி அன்று என்றும், அன்று; நானிலம் எயிற்றில் |
| கொண்ட |
| பன்றி அன்றுஆகின், ஈது ஆர் இயற்றுவார் |
| பரிவின்?' என்னா, |
| 'இன்றுஇது வென்றி' என்று என்று, இராமனும் |
| இரங்கிச் சொன்னான். |
|
வென்றி அன்று என்றும் - (வீடணன் புகழுரைகளைக் கேட்டு மகிழ்ந்த இராமன் சுக்கிரீவனை நோக்கி) (உன்னுடைய இச்செயல்) வெற்றியுடையது அன்று என்றும்: வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க |