- வெற்றி வீரர் பால் அமையத்தக்க புகழத்தக்க: நன்றி அன்று என்றும் அன்று - நன்றியுணர்வினைக் காட்டுவதற்குரியது அன்று என்றும் நான் கருதவில்லை: நானிலம் எயிற்றில் கொண்ட - பூமியைத் தன் தந்தத்தின் நுனியில் ஏந்தி வந்த: பன்றி அன்று ஆகின் - வராக மூர்த்தியாகிய திருமாலைத் தவிர: பரிவின் ஈது ஆர் இயற்றுவார்?-இச்செயலை இவ்வளவு விரைவில் யாரே இயற்ற இயலும்:என்னா- என்று; என்று என்று- மீண்டும் மீண்டும்: இரங்கிச் சொன்னான் - (சுக்கிரீவனை முன்பு வைத்தற்கு) இரங்கிக் கூறினான். |
சுக்கிரீவன் தன் இசைவு பெறாமல், ஆர்வ மிகுதியால் சினங்காவாது பகைவன் பிடியில் அகப்பட இருந்த ஆத்திரச் செய்கை பெருமானை வருத்தியதால் முன்னர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினாலும் மணி முடியைப் பறித்த வெற்றியைப் பெரிதும் பாராட்டினான் என்றும் கொள்க... |
(48) |
கதிரவன் மறைவு |
6943. | தன் தனிப் புதல்வன் வென்றித் தசமுகன் முடியில் |
| தைத்த |
| மின் தளிர்த்தனைய பல் மா மணியினை வெளியில் |
| கண்டான்; |
| 'ஒன்றுஒழித்துஒன்றுஆம்' என்று, அவ் அரக்கனுக்கு |
| ஒளிப்பான்போல, |
| வன் தனிக் குன்றுக்கு அப்பால், இரவியும் மறையப் |
| போனான். |
|
இரவியும் - சூரியனும்; தன் தனிப் புதல்வன் - தன்னுடைய ஒப்பற்ற மகன்; வென்றித் தசமுகன்- வெற்றி பொருந்திய இராவணனுடைய; முடியில் தைத்த- மகுடத்தில் பதித்திருந்த: மின் தளிர்த்து அனைய பல்மா மணியினை- மின்னல் போன்று (தன் ஒளிக்கதிர்கள் படுதலால்) ஒளிசிந்துகின்ற பலபெருமைக்குரிய மணிகளை; வெளியில் கண்டான் - உலகிலே கண்டான்: 'ஒன்று ஒழித்து ஒன்று ஆம்'- 'ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடக்கூடும்' என்று:அவ் அரக்கனுக்கு - அந்த அரக்கனாகிய இராவணனுக்கு: ஒளிப்பான் போல- அஞ்சி ஒளிந்து கொள்பவனைப் போல: வன்தனிக் குன்றுக்கு அப்பால் - வலிய அத்தகிரி எனும் தனக்குரிய |