| அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் | | ஆக | | பொன்றாது பொன்றினான், தன் புகழ் என இழிந்து, | | போனான். | | என்றானும் - எந்த நாளிலேயும்:இனைய தன்மை - இத்தகைய இழிந்த நிலையை: எய்தாத இலங்கை வேந்தன்- அடைந்தறியாத இராவணன்:நின்றார்கள் தேவர் கண்டார்- சுக்கிரீவனால் தான் அடைந்த இழிநிலையை வானத்தில் நின்று தேவர்கள் கண்டார்களே!: என்பது ஓர் நாணம் நீள- என்பதனால் எழுந்த தனித்த வெட்கம் ஓங்க: அன்று- அப்பொழுது: ஆய மகளிர் நோக்கம் - சுற்றியிருந்த அரண்மனை மகளிர் கூட்டத்தின் காதல் பார்வையெல்லாம்: ஆடவர் நோக்கம் ஆக- (காதற்குறிப்பற்ற வெறும்) ஆடவர்கள் பார்வையாகி போக, (மானக்கேட்டால்): பொன்றாது பொன்றினான் - சாவாமல் செத்துக் கொண்டிருந்த இராவணன்: தன் புகழ் என - தன் புகழ் இறங்குவது போல: இழிந்து போனான் - (கோட்டைக்) கோபுரத்திலிருந்து இறங்கிப் போனான். | (51) |
|
|
|