| ' "சேயவர் சேனை நண்ணி, செய் திறம் தெரித்தி |
| நீ" என்று |
| ஏயவன் எய்தினான்' என்று அரசனை இறைஞ்சிச் |
| சொன்னான். |
|
தாயினும் பழகினார்க்கும் - தாயைக்காட்டிலும் நெருங்கிப் பழகினார்க்கும்; தன் நிலை தெரிக்கல் ஆகா - தன்னுடைய (உண்மை) நிலைமையைத் தெரிந்து கூற முடியாத;மாயவல் உருவத்தான்- மாயையில் வல்ல உருவத்தினையுடைய சார்த்தூலன்; முன்வருதலும் - (இராவணனைக்காண அவன் அரண்மனையின்) முன் வந்தான்; வாயில் காப்பான் - அரண்மனை வாயிலைக் காத்து நிற்பான்; சேயவர் சேனை நண்ணி- அந்நியரான பகைவர் படையினை அணுகி; செய்திறம் நீ தெரித்தியென்று - அவர்கள் புரியும்` செயல்களை நீ அறிந்து வந்து தெரிவிப்பாய் என்று; ஏயவன் எய்தினான் என்று - (உன்னால்) ஏவப்பட்டவன் வந்துள்ளான் என்று;அரசனை இறைஞ்சிச் சொன்னான் - இராவணனைப் பணிந்து கூறினான். |
"துறந்தார் படிவத்தார் ஆகி இறந்து ஆராய்ந்து என் செயினும் சோர்விலது ஒற்று" (திருக்.: 586) ஆதலின், தாயினை விடவும் பழகினார்க்கும் தன் நிலை தெரிவிக்காத ஒற்றனாயிருந்தான் சார்த்தூலன் என்க. ஒற்றர் வடிவமாற்றம் செய்யும் கலையில் வல்லவராயிருத்தல் வேண்டும். அந்த வடிவமாற்றிக்கலையில், இயல்பாகவே அரக்கர் வல்லார் ஆதலின், "தெரிக்கல் ஆகா மாயவல் உருவத்தான்" சார்த்தூலன் என்றார். |
(3) |
இராவணன் வினாவும் சார்த்தூலன் விடையும் |
6949. | 'அழை' என, எய்தி, பாதம் வணங்கிய |
| அறிஞன்தன்னை, |
| 'பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி' என்று |
| அரக்கன் பேச, |
| முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை |
| நோக்கி, |
| குழையுறு மெய்யன், பைய, வரன்முறை கூறலுற்றான். |
|
அழை என எய்தி - '(உள்ளே) அழைத்திடு' என இராவணன் கூற, உள்ளே அடைந்து; பாதம் வணங்கிய- தன் அடிகளில் |