பக்கம் எண் :

574யுத்த காண்டம் 

6951.

'அன்றியும், பதினேழ் வெள்ளத்து அரியொடும் 

அரசன் மைந்தன்;

தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் 

செய்வதானான்;

ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் 

துணைவரோடும்

நின்றனன், நீலன் என்பான், குண திசை வாயில் 

நெற்றி.

 

அன்றியும்  -  அல்லாமலும்;    அரசன்  மைந்தன் -
கிட்கிந்தைக்கு    இளவரசனாகிய  அங்கதன்;     பதினேழ்
வெள்ளத்து  அரியொடும்
  -    பதினேழு      வெள்ளம்
வானரப்படைகளுடனே; தென்திசை வாயில் - இலங்கையின்
தெற்குத்திசை வாயிலில்;  செய்யும் செரு எலாம் செய்வது
ஆனான்
- செய்ய வேண்டிய  போரையெல்லாம் செய்வதற்கு
நியமிக்கப்பட்டுள்ளான்; ஒன்று  பத்து ஆறு வெள்ளத்து -
(மேலும்) பதினேழு வெள்ளம்;அரியொடும் துணைவரோடும்-
குரங்குகளோடும்    துணையான  நண்பர்களோடும்;   நீலன்
என்பான்
- நீலன் என்று   சிறப்பித்துச்  சொல்லப்படுகிறவன்;
குண திசை வாயில்  நெற்றி நின்றனன்
-  கிழக்குத் திசை
வாயிலின் முன்பு நின்றுள்ளான்.
 

ஒன்று  பத்து  ஆறு-கூட்டுத் தொகையாய்ப் பதினேழைக்
குறித்து   நின்றது. படைகள் வந்து தண்டு இறங்கியுள்ள இடம்
வடக்குக்   கோட்டை   வாயில்  ஆதலின், அதனைத் திசை
குறியாமல் கூறியுள்ள திறம் காண்க. 
 

(6)
 

6952.

'இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு, 

இரண்டு வெள்ளம்

வெம்பு வெஞ் சேனைக்கு எல்லாம் உணவு தந்து

உழலவிட்டான்;

உம்பியை, வாயில்தோறும் நிலை தெரிந்து உணரச்

சொன்னான்;

தம்பியும் தானும் நிற்பதாயினான்; சமைவு ஈது'  

என்றான்.

 

இரண்டு   வெள்ளம்- இரண்டு வெள்ளம் சேனையை;
இம்பரின்
  - இவ்வுலகிலே;   இயைந்த   காயும் கனியும்
கொண்டு -