பக்கம் எண் :

 அணி வகுப்பு படலம் 575

உண்ணத்தக்க   காய்   கனிகளைக் கொண்டு  வந்து;வெம்பு
வெஞ்சேனைக்கு  எல்லாம்
  -  சினந்து போரிடும்  கொடிய
சேனைகட்கு  எல்லாம்;   உணவு  தந்து   உலவவிட்டான்-
உணவு  அளிக்குமாறு   திரிய   விட்டிருக்கிறான்;  (இராமன்)
உம்பியை
-  உன்னுடைய   தம்பியாகிய  வீடணனை; வாயில்
தோறும்
- நான்கு  வாயில்களிலும்;நிலை  தெரிந்து  உணரச்
சொன்னான்
-  (அவ்வப்போதுள்ள)   நிலவரங்களை  அறிந்து
தன்னிடம் அறிவிக்கக்   கூறியுள்ளான்;  தானும் தம்பியும்  -
தானும் தன் தம்பியாகிய இலக்குவனும் ஆக;நிற்பது ஆயினன்
- (வடக்கு வாயிலில்) நிற்பது ஆனான்; சமைவு ஈது என்றான்-
(எதிரியின் அணியில் நிகழ்ந்துள்ள)  ஏற்பாடுகள்  இது   என்று
முடித்தான் (சார்த்தூலன்).
 

"இதனை    இதனால்   இவன்  முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்  கண்   விடல்"   (திருக். 517) என்பதற்கேற்ப
உரியவர்களுக்கு  உரிய  பணிகள் தரப்பட்டன. வெள்ளம்-ஆகு
பெயராய்ச் சேனையைக்    குறித்தது.    "இயைந்த  எல்லாம்"
என்பதற்கு  "கிடைத்தவையெல்லாம்"   எனினும்   பொருந்தும்.
இன்றுள்ள படை அமைப்பிலும் இம்முறைகள் உள்ளமை அறிக. 
 

(7)
 

இராவணன், அமைச்சரோடு ஆராய்தல்
 

6953.

சார்த்தூலன் இதனைச் சொல்ல, தழல் சொரி

தறுகணானும்,

பார்த்து, ஊழி வடவை பொங்க, 'படுவது படுமா

 பார்த்தி;

போர்த் தூளி துடைப்பென் நாளை, அவர் 

உடற்பொறையின்நின்றும்

தேர்த்து ஊறு குருதிதன்னால்' என்றனன், எயிறு 

தின்னா.

 

சார்த்தூலன்  இதனைச் சொல்ல- சார்த்தூலன் இவ்வாறு
கூறி  முடித்தவுடன்;  தழல்  சொரி தறு கணானும்- தீப்பொறி
சிதறும் கண்கள் கொண்ட இராவணனும்; பார்த்து- (கனல் சொரி
கண்ணினனாய்) பார்த்து; எயிறு  தின்னா- பற்களைக்  கடித்த
வண்ணம்;அவர் - அப்பகைவரின்;உடல் பொறையின் நின்றும்
- உடல்  சுமையிலிருந்தும்;தேர்த்து  ஊறு  குருதி தன்னால்-
தேர்   சென்ற   சுவடு   வழியாய்  ஓடும் குருதி வெள்ளத்தால்;
போர்த்தூளி நாளை துடைப்பென்
- போரால் எழும் புழுதியை
நாளை