போக்குவேன்; ஊழி வடவை பொங்கப்படுவது - ஊழிக்காலத்தே வடவா முகாக்கினி பொங்கியெழுகையில் உலகோர் அழிவதைப் போன்ற அழிவினை; படுமா பார்த்தி - போர்க்களத்தில் நாளை (நீ) பார்ப்பாயே;என்றனன்... - என்று கூறினான். |
(8) |
6954. | மா அணை நீலக் குன்றத்து இள வெயில் வளர்ந்தது |
| என்ன, |
| தூ அணை குருதிச் செக்கர்ச் சுவடு உறப் பொலிந்த |
| தோளான், |
| ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற |
| பூ அணை மாறி, வேறு ஓர் புனை மணி இருக்கை |
| புக்கான்.* |
|
மா அணை நீலக்குன்றத்து- (இவ்வாறு சார்த்தூலனிடம் கூறிய இராவணன்) பெருமை பொருந்திய நீலமலையில்; இளவெயில் ஊர்ந்தது என்ன- இள வெயில் எழுந்தால் போன்று; தூ அணை குருதிச் செக்கர் சுவடு உறப் பொலிந்த தோளான் - தசையோடு பொருந்திய குருதிக்கறை பதிந்த சுவடுகள் அழுந்திய அழகிய தோள்களையுடைய இராவணன். ஏ அணை வரிவில் காமன் கணைபட- அம்பு எய்யும் தொழிலையுடைய வரிந்து கட்டப்பட்ட வில்லோன் ஆகிய மன்மதனின் கணைகள் பட்டதனால்; எரியா நின்ற - வெப்பம் விளைவித்த; பூ அணை மாறி - மலர் மஞ்சத்திலிருந்து மாறி; வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான்- வேறு ஒரு மணிகள் புனையப் பெற்ற அறையைச் சென்றடைந்தான். |
(9) |
6955. | செய்வன முறையின் எண்ணி, திறத்திறம் உணர்வின் |
| தேர, |
| மை அறு மரபின் வந்த அமைச்சரை, 'வருக!' |
| என்றான்-- |
| பொய் எனப் பளிங்கின் ஆய இருக்கையின் |
| புறத்தைச் சுற்றி, |
| ஐ-இரண்டு ஆய கோடிப் பேய்க் கணம் காப்பது |
| ஆக்கி. |
|
பொய் என - (கட்டிடம் இல்லாத) வெற்றிடம் என்று புலப்படும்படி; பளிங்கின் இருக்கையின் - பளிங்கினால் |